ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி மரணமடைந்துவிட்டதாக ஈரான் அதிகார வட்டாரங்களில் தகவல் பரவி வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் முன்னாள் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் உச்சத்தலைவராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்ததாகவும், அவர் ஈரானிலேயே இல்லை என்றும், ரகசிய இடத்தில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதிகாரப்பூர்வ மவுனம்
அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றாலும், ஈரான் உயர் அதிகாரிகளிடையே அவர் உயிரிழந்துவிட்டதாகப் பேச்சுகள் அடிபடுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்காவின் நிலைப்பாடு
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் உயர் மட்ட ராணுவத் தலைமை அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மொஜ்தபா கமேனி உயிரிழக்கும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு ஈரானிய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அவருக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறிவருகின்றனர்.
நிதர்சனம்
மொஜ்தபா கமேனி உச்சத்தலைவராகப் பொறுப்பேற்றது முதல், இன்றுவரை அவர் பொதுவெளியில் தலைகாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் போரால் காலியான அமெரிக்க ஆயுதக் கிடங்கு… பென்டகன் போட்ட ‘அவசர’ உத்தரவு!
