ஏடிஎம் கொள்ளை- 7 வயது சிறுவன் துணிகரம்
ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் திருவூர் கூட்டுறவு வங்கி ஏடிஎம்-ல் இருந்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தின் திருவூர் நகரில் உள்ள கேடிசிசி கூட்டுறவு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த கொள்ளை கும்பல் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் உடைக்க முடியாத நிலையில் கொள்ளை கும்பல் ஏமாற்ற, அடைந்தனர். இதுகுறித்து திங்கட்கிழமை காலை அப்பகுதி பணம் எடுக்க வந்தபோது பார்த்து உடைக்க முயற்சி செய்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வங்கி அதிகாரிகளுடன் வந்து சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளை கும்பல் முகம் தெரியாத வகையில் வெள்ளை நிற முகவசம் அணிந்த நிலையில், சிறுவன் ஒருவனையும் துணைக்கு அழைத்து வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சிறுவன் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களின் குழந்தையா அல்லது சிறார்களை கடத்தி சென்று இதுபோன்ற பசியை காண்பித்து குற்றச்சம்பவங்களுக்கு பயன்படுத்தும் கும்பலை சேர்ந்தவர்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.