மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிகெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் டி-20 உலகக் கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியானது.


மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை , ஜிம்பாப்வே ஆகிய 3 இடங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியது.
இந்தநிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த தொடரை வங்கதேச கிரிகெட் வாரியமே நடத்தும் என்றும் ஐசிசி அறிவிக்கப்பட்டுள்ளது.


