Homeசெய்திகள்சினிமா2வது திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சன்.... நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஏ.எல். விஜய்!

2வது திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சன்…. நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஏ.எல். விஜய்!

-

- Advertisement -

எமி ஜாக்சன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு இயக்குனர் ஏ.எல். விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.2வது திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சன்.... நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஏ.எல். விஜய்!

நடிகை எமி ஜாக்சன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி உள்ளிட்ட மொழிபடங்களிலும் நடித்து வருபவர். ஆரம்பத்தில் இவர் மாடலிங்கில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். அதன் பின்னர் கடந்த 2019 ஆர்யா நடிப்பில் ஏ.எல். விஜய் இயக்கியிருந்த மதராசப்பட்டினம் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து தாண்டவம், தெறி, கெத்து, ஐ என்ன பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 2வது திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சன்.... நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஏ.எல். விஜய்!கடைசியாக இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு பிசியான நடிகையாக பலம் வரும் எமி ஜாக்சன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எமி ஜாக்சன், ஜார்ஜ் தம்பதியினருக்கு ஆண் குழந்தை இருக்கிறது. சில வருடங்கள் கழித்து இருவரின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன் அவருடன் சில நாட்கள் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இத்தாலியில் காஸெல்லோ டி ரோகோ நகரில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. 2வது திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சன்.... நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஏ.எல். விஜய்!இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எமி ஜாக்சனை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஏ.எல். விஜய் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். “இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்து அழகான இந்த திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி. இருவரும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ