spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுதிரை, அரிவாள், வேல் கம்பு.....'சூர்யா 45' படத்தின் கதை இதுதானா?

குதிரை, அரிவாள், வேல் கம்பு…..’சூர்யா 45′ படத்தின் கதை இதுதானா?

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.குதிரை, அரிவாள், வேல் கம்பு.....'சூர்யா 45' படத்தின் கதை இதுதானா? அதே சமயம் நடிகர் சூர்யா தனது 44 வது திரைப்படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தினை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்க இருக்கிறார். சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் போஸ்டருடன் வெளியிடப்பட்டது. அந்தப் போஸ்டரில் அரிவாள், வேல் கம்பு, குதிரை போன்றவை காண்பிக்கப்பட்டிருந்தன. எனவே இந்த படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் படம் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. அதே சமயம் கருப்பு என்பதுதான் இந்த படத்தின் கதை என்ற ஒரு பக்கம் செய்திகள் பரவ, மற்றொரு பக்கம் ஹின்ட் என்பது தான் இந்த படத்தின் தலைப்பு என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. குதிரை, அரிவாள், வேல் கம்பு.....'சூர்யா 45' படத்தின் கதை இதுதானா?அதாவது ஆர்.ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன் படத்தைப் போல திரிஷா நடிப்பில் மாசாணி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் கசிந்து வந்தன. அதன் பிறகு ஆர்.ஜே. பாலாஜி இந்த கதையை ஆண் கடவுளாக மாற்றி அதில் தானே ஹீரோவாக நடிக்க திட்டமிட்டார். பின்னர் விஜயிடம் சென்று கதை சொல்லி இருக்கிறார். ஆனால் விஜய் இந்த கதையில் நடிக்க முடியாமல் போக சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி. சூர்யா உடனே ஒப்புக்கொள்ள படத்தை ஆரம்பித்துள்ளார். எனவே சூர்யா 45 படமானது ஆண் கடவுள் தொடர்பான கதைக்களம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ