spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை - நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா...

தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை – நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!

-

- Advertisement -

2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும் என்றும், பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது என்றும் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில், வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  கால சூழல் காரணமாக, மேடையில் அண்ணன் திருமாவளவன் இல்லை என்றும், ஆனால் அவரின் மனசாட்சிதான் இங்கேதான் இருக்கிறது என்பது தனக்கு தெரியும். திருமாவின் கனவு இன்று விகடன் முலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

பலரும் சகோதரர் விஜய்க்கு அரசியல் தெரியுமா, அவருக்கு கொள்கை தெரியுமா என்கின்றனர். கொள்கை பேசும் கட்சிகள் ஏன் அம்பேத்கரை இதுவரை மேடை ஏற்றவில்லை? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். இந்த புத்தக விழாவின் வெற்றி முதல் முறையாக அம்பேத்கரின் நினைவு நாளுக்கு அனைத்து அமைச்சர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, புரட்சியாளர் அம்பேத்கர் என கூறுவதாக ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.

மேலும் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதை விட 2026 தேர்தலுக்கான பணிகள் உள்ளதாகவும், மன்னர் ஆட்சி ஒழிக்க வேண்டும் என்றும் கூறினார். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்தியவர் அம்பேத்கர். அதுபோல பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்பட கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும் என்றும் அவ்ர் குறிப்பிட்டார்.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொன்னால் எல்லாரும் எதிர்ப்பதாகவும், ஒரு தலித் முதலமைச்சராக ஒலிக்க வேண்டும் என்றால் முதல் குரல் விஜயின் குரல் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

 

MUST READ