Homeசெய்திகள்தமிழ்நாடு"பின்வாசல் கதவை திறக்காதே!": வெளிநாட்டு நிதி ஊடுருவலைக் கடுமையாக எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!

“பின்வாசல் கதவை திறக்காதே!”: வெளிநாட்டு நிதி ஊடுருவலைக் கடுமையாக எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் நீட் எதிர்ப்புத் தீர்மானங்கள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வெளிநாட்டு நிதிகள் ‘பின்வாசல்’ வழியாக ஊடுருவுவதைத் தடுத்து நிறுத்தவும் அரசுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்தார்."பின்வாசல் கதவை திறக்காதே!": வெளிநாட்டு நிதி ஊடுருவலைக் கடுமையாக எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!

சட்டமன்ற நேரலை: கேப்டனின் கனவு நனவானது!
சட்டமன்ற நிகழ்வுகளைத் தொலைக்காட்சி வாயிலாக நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ‘புரட்சி கலைஞர்’ கேப்டன் விஜயகாந்த் பட்ட பாடுகளைப் பிரேமலதா சுட்டிக்காட்டினார். பல ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அந்த நேரலையை இன்றைக்குச் சாத்தியமாக்கியுள்ள அரசுக்கும், கேமராமேன்களின் மனிதநேயக் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவருக்கும் அவர் தனது நன்றிகளைப் பதிவு செய்தார்."பின்வாசல் கதவை திறக்காதே!": வெளிநாட்டு நிதி ஊடுருவலைக் கடுமையாக எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!

we-r-hiring

தமிழ் தாய் வாழ்த்தும், ஈழத் தமிழர் உரிமையும்!
“தமிழ் எங்கள் தாய்மொழி, தமிழ்நாடு எங்கள் நாடு; இதில் எவருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது” என ஆவேசமாகத் தெரிவித்த பிரேமலதா, தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழகத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல என்றார். இலங்கை வாழ் தமிழர்களின் தொப்புள் கொடி உறவாகவும், அவைகளின் குரலாகவும் அன்று 1982-லேயே தன் கட்சிக்காக உண்ணாவிரதம் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் என்பதை நினைவு கூர்ந்தார். தனது இறுதி மூச்சு வரை கதராடையும் தமிழும் மட்டுமே கேப்டனின் அடையாளமாகத் திகழ்ந்தன என்றார்.

நீட் மரணங்கள்: மக்களின் குரலுக்குத் தேமுதிகவின் முழு ஆதரவு
நீட் தேர்வுக்கு எதிரான அரசின் தனித் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அவர், “அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்களின் மரணம் நெஞ்சைப் பிழிகிறது. தங்கை அனிதாவின் இறுதிச் சடங்கில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியவர் கேப்டன் என்பதை யாரும் மறக்க முடியாது!” என்றார். நீட் தேர்வு வேண்டாம் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒற்றைக் குரல் என்றும், அந்த மக்கள் விருப்பத்திற்குத் தேமுதிக எப்போதும் தோள் கொடுக்கும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

FCRA எச்சரிக்கை: பின்வாசல் வழியாக வரும் பணத்திற்கு முற்றுப்புள்ளி வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) குறித்துப் பேசிய பிரேமலதா, ஆட்சியாளர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார் “வெளிநாடுகளில் இருந்து பின்வாசல் வழியாக இந்தியாவுக்குள் பாய்ந்தோடும் நிதி, எந்தக் காரணத்திற்காகவும் தவறான மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது!” லஞ்சம் மற்றும் ஊழலுக்கு இடமளிக்காத, நேர்மையான ஒரு நிர்வாகத்தை நிலைநாட்ட வேண்டியது அரசின் தலையாய கடமை என்றும், அந்த லஞ்ச ஊழலைத் தீவிரமாக எதிர்த்த இயக்கம்தான் தேமுதிக என்றும் அவர் முழங்கினார்.

தொழிலாளர் மற்றும் மீனவர் குரல்
தீர்மானங்களைத் தாண்டி, தமிழ்நாட்டில் போராடிவரும் மீனவர்கள், செவிலியர்கள் மற்றும் உப்புத் தொழிலாளர்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டிய பிரேமலதா, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். பேரவைத் தலைவரின் அறிவுறுத்தலை ஏற்று, மானியக் கோரிக்கைகளின் போது இது குறித்து விரிவாக விவாதிக்கப் போவதாகக் கூறி, அரசின் அனைத்துத் தீர்மானங்களுக்கும் தேமுதிக தனது முழுமையான ஆதரவை ஆவேசமாகப் பதிவு செய்தது.

தெருப் பெயர்களில் சாதிப் பெயர்களை அகற்றும் உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

MUST READ