நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவர் குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களை சேகரித்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அதாவது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவரும் இணைந்து கீதகோவிந்தம் ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இருவரும் பல இடங்களுக்கு டேட்டிங் சென்று வருவது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய வருங்கால கணவரிடம் என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி உள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது, “ஒரு உறவில் அன்பு, அக்கறை, உண்மை, வெளிப்படைத்தன்மை, நல்ல இதயம் ஆகியவை அவசியம். இது என்னிடம் இயல்பாகவே இருக்கிறது. அதேபோல் என்னைப் போன்ற குணங்களைக் கொண்ட ஒருவர்தான் என் கணவராக வரவேண்டும் என நான் விரும்புகிறேன். மேலும் அவர் என்னுடைய ஏற்றத்தாழ்வுகள் அனைத்திலும் உறுதுணையாக இருக்க வேண்டும். கவனமாகவும், நேர்மையாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம். நம்முடன் யாருமே இல்லை என்றால் இந்த வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன் இருக்கிறது?” என்று கூறியுள்ளார்.
- Advertisement -