spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிரைவில் அவர் சிங்கம் போல் மீண்டு வருவார்.... விஷால் குறித்து ஜெயம் ரவி!

விரைவில் அவர் சிங்கம் போல் மீண்டு வருவார்…. விஷால் குறித்து ஜெயம் ரவி!

-

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி, விஷால் குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் பேசியுள்ளார்.விரைவில் அவர் சிங்கம் போல் மீண்டு வருவார்.... விஷால் குறித்து ஜெயம் ரவி!ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக பிரதர் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து வருகின்ற ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் வினய் ராய், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கென், லால் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி விஷால் குறித்து பேசி உள்ளார். விரைவில் அவர் சிங்கம் போல் மீண்டு வருவார்.... விஷால் குறித்து ஜெயம் ரவி!அதன்படி அவர் பேசியதாவது, “விஷாலை விட ஒரு தைரியசாலி யாருமே கிடையாது. அவர் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருந்தாலும் அவருடைய தைரியம் அவரைக் காப்பாற்றும். கூடிய சீக்கிரம் அவர் சிங்கம் போல் மீண்டு வருவார். அவருடைய நல்ல மனசுக்கும் அவருடைய குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக விரைவில் அவர் மீண்டு வருவார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ