விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் பிரியங்கா தேஷ் பாண்டே. இவருடைய சிரிப்பு, கலகலப்பான பேச்சு பலரையும் கவர்ந்திழுக்கும். அந்த வகையில் இவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி டிஜே வசி என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த பிரியங்கா – வசியின் திருமணம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியங்கா, பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆறு வருடங்களுக்குப் பிறகு இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன்படி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றனர். இந்நிலையில் பிரியங்கா- பிரவீன் குமாரின் பிரிவிற்கு வசிதான் காரணம் என்றும் பிரியங்காவும் – வசியும் நீண்ட நாட்களாக லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தனர் என்றும் செய்திகள் வெளியானது. அதே சமயம் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை முடித்த பிரியங்கா, தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருப்பதாகவும் அதன் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார்.
ஆகையினால் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை என்று பிரியங்கா சொன்னதற்கும், அவருடைய அவசர திருமணத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? பிரியங்கா கர்ப்பமானதன் காரணமாக தான் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டாரா? என்று பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து சிலர், திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று பிரியங்காவிற்கு ஆதரவாகவும், பயில்வான் ரங்கநாதனை திட்டியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -