spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவர் இல்லாம சினிமால நான் இல்ல..... சிம்பு குறித்து சந்தானம்!

அவர் இல்லாம சினிமால நான் இல்ல….. சிம்பு குறித்து சந்தானம்!

-

- Advertisement -

நடிகர் சந்தானம், சிம்பு குறித்து பேசி உள்ளார்.அவர் இல்லாம சினிமால நான் இல்ல..... சிம்பு குறித்து சந்தானம்!

சந்தானம் நடிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை ஆர்யா தயாரித்துள்ள நிலையில் பிரேம் ஆனந்த் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் சமீபத்தில் டிரைலரும் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தான் நேற்று (மே 5) இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சந்தானம், ஆர்யா, சிம்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் சந்தானம் சிம்பு குறித்து பேசினார். அதன்படி அவர், “STR ஐ பற்றி நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கிறேன். அவர் இல்லாமல் இங்க நான் இல்ல. அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

we-r-hiring

மன்மதன் படத்திலேயே என்னை காட்டும் போது ரசிகர்கள் கைத்தட்ட வேண்டும் என்று நினைத்தார். அந்த எண்ணம் அவருக்கு இப்போதும் இருக்கிறது. STR 49 படத்தில் கூட என்னை நன்றாக காட்ட வேண்டும் என்று என்னைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட அன்பும், அரவணைப்பும் கொண்ட அருமையான ஒருத்தர் எனக்கு கிடைப்பதற்கு என் கடவுளுக்கும், என் அப்பா – அம்மாவிற்கும் நன்றி சொல்லணும். எப்போதுமே ஐ லவ் யூ STR” என்று பேசியுள்ளார்.

MUST READ