spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமாற்றப்பட்ட அதிகாரி! மூடி மறைக்கப்படும் கீழடி! வேலையை காட்டிய மோடி!

மாற்றப்பட்ட அதிகாரி! மூடி மறைக்கப்படும் கீழடி! வேலையை காட்டிய மோடி!

-

- Advertisement -

கீழடி அகழாய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமாகிருஷ்ணா ஒரு தமிழர் கிடையாது என்றும், கீழடியில் தனக்கு அளிக்கப்பட்ட வேலையை மிகவும் சிறப்பாக அவர் செய்து முடித்துள்ளதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கீழடி அகழாய்வை மேற்கொண்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு தொடர்பான, அறிக்கைகளை தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டார். ஆனால் அந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதற்கு பதிலாக அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் சில விளக்கங்களை கேட்டிருக்கிறார்கள். மத்திய அரசில் பணிபுரிந்துள்ளதன் மூலம் என சில தொடர்புகள் உள்ளன. அவர்கள் மூலம் விசாரித்தபோது மத்திய அரசின் கேள்விகளுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துவிட்டார் என்று தெரியவந்துள்ளது. கீழடி அகழாய்வு முடிவுகளை தன்னால் மாற்ற முடியாது என்றும், கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அடிப்படையில் வந்த முடிவுகளை அறிக்கையில் தெரிவித்துள்ளேன் என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறி விட்டார்.

அப்படி முடிவை மாற்ற வேண்டும் என்றால் மற்றொரு அகழாய்வை நடத்தி வேறுபாடு வருகிறதா? என்று பார்க்கலாம். ஆனால் இந்த அகழாய்வு நடைபெற்றது நடைபெற்றதுதான். அதற்கான ஆய்வு அறிக்கையை வழங்கி விட்டதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறிவிட்டார். அறிக்கை அளிக்கப்பட்ட பின்னர் இரண்டாது கருத்துக் கேட்புக்காக அனுப்புகிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் ஏன் இரண்டு வருட காலத்திற்கு பிறகு அனுப்பினார்கள் என்பதுதான் கேள்வியாகும். கீழடி ஆய்வு  அறிக்கையில் சந்தேகம்  இருந்தால், அவர் அறிக்கை கொடுத்த உடனே கேட்டிருக்கலாமே. ஏனென்றால் அந்த அறிக்கையை கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.

மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், மத்திய அமைச்சரை நேரில் சந்தித்தும், கடிதம் எழுதியும் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அத்துடன் நீதிமன்றமும் அறிக்கையை  வெளியிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தது. இதனால் அவர்கள் அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் நாங்கள் அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதை காட்டுவதற்காக இந்த நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இது திசை திருப்புகிற வேலையாகும். அமர்நாத் ராமகிருஷ்ணன் டெல்லியில் பணிக்கு சேர்ந்து 9 மாதங்களே ஆகிய நிலையில், அவரை உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவுக்கு மாற்றம் செய்திருக்கிறார்கள். அவருடைய பணியிலும் மாறுதல் செய்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் வைத்து பார்க்கிறபோது இது தேவையில்லாத மாற்றம் என்று தெரியவருகிறது. 5,300 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் இருந்ததாக சிவகளை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. விமர்சகர்கள் சிந்து நதியை ஒட்டி நாகரிகம் இருந்தது. நைல் நதியை ஒட்டி நாகரிகம் இருந்தது. கீழடியில் எங்கே நதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இன்றைக்கு இருப்பது போன்று வைகை நதி, அன்றைக்கும் இருந்ததா?

நாகரிகம் தொடர்பாக பழைய தியரிகள் உடைத்து நொறுக்கப்பட்டு உள்ளன. பழைய கற்காலம், புதிய கற்காலம், பித்தளை காலம், வெண்கலம், அடுத்து இரும்புகாலம் வந்து என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதினார்கள். ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கிறபோது, அதே காலகட்டத்தில் தமிழர்கள் நாகரிகம் இருந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்றைக்கு தொல்பொருள் ஆய்வாளர்கள், ஒரு இடத்தில் பித்தளை, வெண்கலம் காலம் நிலவுகிறபோதே, மற்றொரு இடத்தில் இரும்புக்காலம் நிலவி இருந்துள்ளது என்று சொல்கின்றனர். அப்போது  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே கால கட்டத்தில் பல்வேறு நாகரிங்கள் இருந்துள்ளன என்று சொல்கிறார்கள். இந்தியாவில் அகழாய்வு என்றால் அது சிந்து சமவெளி நாகரிகத்தை மையமாக கொண்டதாக தான் இருந்தது. அதை தவிர்த்து வேறு எதை பற்றியும் யோசிக்காத காலகட்டமாக இருந்தது.

5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் - திராவிடர்களே மூத்த குடிமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வின்சென்ட் ஸ்மித் சொன்னார், இந்தியாவின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும் என்றால், அது தென்னிந்தியாவில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என்று சொன்னார். நாம் கீழடியை பார்த்தோம். அடுத்து கொற்கையை பார்க்க போகிறோம். கொடுமணல், ஆதிச்சநல்லூர் போன்றவற்றை பார்த்தோம். சிவகளையை பார்க்கிறோம். அடுத்து கன்னியாகுமரி, பூம்புகாரில் இருந்து போனோம் என்றால் இன்னும் எவ்வளவோ கிடைக்கும். மத்திய அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் தொல் நாகரிகம் தமிழர்களுடையது என்று தெரியாமல் இருந்தது. இன்றைக்கு தெரிய வருகிறபோது, அனைத்தும் வடஇந்தியாவை மையப்படுத்தியதாக உள்ளது மாறிவிடுமோ என்கிற அச்சம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அந்த அச்சத்திற்கு எந்த தர்க்க ரீதியான காரணம் கிடையாது. ஆதிச்சநல்லூர் கி.மு.9ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும். இடுகாட்டில் ஆய்வு மேற்கொண்டார்கள். அதன் அருகில் குடியிருப்புகள் இருந்திருக்கும் அல்லவா? அங்கு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டாமா?

அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒரு தமிழர் கிடையாது. அவர் ஒரு தொல்லியல் அகழாய்வு நிபுணர் ஆவார். அவர் தனது வேலையை சரியாக செய்து முடித்தார். அமர்நாத்தை மாற்றிவிட்டு மற்றொரு நபரை கொண்டு வந்தார். அவர், கீழடியில் அப்படி விஷேசமாக எதுவும் கிடையாது என்று அறிக்கை கொடுத்தார். இதைதான் அவர்கள் விரும்புகிறார்கள். அமர்நாத் போன்று உண்மை பேசுபவர்களை அவர்கள் விரும்பவில்லை. அப்படி உண்மையை சொன்னால் தமிழ்நாட்டின் தொல்பெருமை தெரிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். தொல்லில் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி பெற வேண்டும். அதனால் தமிழக அரசு அனுமதி பெற்று தான் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிச்சயமாக யாருடைய சூழ்ச்சியும், தமிழின் மேன்மையையோ, தமிழின் தொன்மையையோ, தமிழர்களுடைய பண்பாட்டு சிறப்பையோ யாராலும் சிதைத்துவிட முடியாது. உண்மை வெளிவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ