spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஈரானின் அணு ஆயுத ரகசியம்! இஸ்ரேல் இதை எதிர்பார்க்கல! ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

ஈரானின் அணு ஆயுத ரகசியம்! இஸ்ரேல் இதை எதிர்பார்க்கல! ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

-

- Advertisement -

இஸ்ரேல் – ஈரான் போர் மூன்றாம் உலகப் போராக மாறாது என்று பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து  பாதிரியார் ஜெகத் கஸ்பர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கியுள்ள போர், விரைவாகவும் வெற்றிகரமாகவும் முடியும் என்று இஸ்ரேல் நினைத்திருந்தால் அந்த கணக்கு தவறு என்பது களத்தில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. எளிதில் ஈரானுடைய அரசியல் தலைமையை வீழ்த்திவிடலாம் என்று இஸ்ரேல் நினைத்திருந்தால், அதுவும் எளிதில் நிறைவேறுவதற்கான வாய்ப்பு தெரியவில்லை. வலிமையான இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவி ஹைபா போன்ற நகரங்களையும், இஸ்ரேலின் அறிவுச்சொத்து என்று சொல்லப்பட்ட வீஸ்மன் பல்கலைக் கழகத்தையும் தாக்கி ஈரான் வெற்றி கண்டுள்ளது. முதற்கட்டத்தில் ஈரானுடைய வான்பாதுகாப்பு அமைப்புகளை தகர்ப்பதில் இஸ்ரேல் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் அதில் ராஜதந்திர ரீதியான வெற்றி கிடைத்ததா? என்றால் உறுதியாக கிடைக்கவில்லை. காரணம் இஸ்ரேலின் இலக்கு என்பது ஈரானின் அணு ஆய்வு வளாகங்களை தாக்கி அழிப்பதாகும். அது இன்னும் நடந்தேறவில்லை.

எப்பாடியவாது அமெரிக்காவை இந்த போருக்குள் கொண்டு வந்து விடலாம் என்ற இஸ்ரேலின் விருப்பமும் நிறைவேறியதாக தெரியவில்லை. இந்த இரண்டு வார கால போரில் ஈரானை எளிதாக பணிய வைக்க முடியாது என்பது தெரியவ்ந்துள்ளது.  இஸ்ரேல், ஈரானின் வான் பரப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு, பாதுகாப்பாக திரும்பி வருவது என்று ஆபரேஷனல் ரீதியாக வெற்றி பெற்றது. ஈரான் தாக்கு பிடிக்க முடியாமல் முற்றிலும் சீர்குலைந்துவிடும் என்று முதல் வார முடிவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது வாரம் முடிகிறபோது ஈரான் அவ்வளவு சீக்கிரமாக சிதைந்து போகாது. ஒரு உறுதியான பதிலடியை திருப்பி கொடுக்கும் என்று தெரியவருகிறது. எனவே போரில் சமனிலை என்றுதான் பார்க்க வேண்டும். போரில் யாருக்கும் சாதம் என்று சொல்ல முடியாது.

இஸ்ரேல் 2 முதன்மையான இலக்குகளை கொண்டிருந்தது. ஒன்று ஈரானின் அணு ஆயுத தளங்களை அழிப்பது. அல்லது நெடுங்கால தாமதத்தை ஏற்படுத்துவது. இரண்டாவது ஈரானில் அதிகார மாற்றம் கொண்டு வருவது. முதல் இலக்கான ஈரான் அணு ஆயுததளங்களை அழித்தொழிப்பது என்பது, அமெரிக்காவின் பி-2 பாம்பர்ஸ் வந்தாலும் முழுமையாக அழிக்க முடியாது. மிகப்பெரிய மலைக்கு அடியில் 90 அடி கான்கிரீட் தளத்திற்கு கீழ் வைக்கப்பட்டிருப்பதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அந்த பி-2 பாம்பர்களை வைத்தும் ஃபர்டோவ் அணு ஆய்வு தளத்தை அழிப்பது சந்தேகம் என்று தான் ஆய்வாளர்கள் சொல்லியுள்ளனர். இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்து களத்தில் இறங்கினால் மற்ற இடங்களை சிதைக்க முடியும். எப்படி ஆனாலும் ஈரான் ஒரு அணு ஆயுத வல்லரசாக மாறுவதை தாமதப்படுத்த தான் முடியுமே தவிர. முற்றாக தடுத்து நிறுத்த முடியாது. ஈரானின் அணு ஆய்வு தளங்களை தாக்குவதன் மூலம் ஏற்படுகிற கதிரியக்க பேரிடர்கள், அதனை சார்ந்த பெரும் அழிவுகள் குறித்து நாம் ஏன் பேசுவதில்லை. அமெரிக்க ஆட்சி மாற்றம் செய்யும் என்கிற எண்ணம் ஈரானிய அதிகாரிகளுக்கு இல்லாமல் இல்லை. அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் அவர்கள் செய்திருப்பார்கள். எனவே உடனடியான அதிகார மாற்றம் என்பது சாத்தியமில்லாதது.

ஈரானின் பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் இஸ்ரேலின் மிக முக்கியமான இலக்குகளை தாக்க முடியும் என்று நிருபித்துள்ளது. கைடட் ஏவுகணைகளை வைத்து, இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவ முயன்றுள்ளதால் ரஷ்யா, சீனா வழங்கிய தொழில்நுட்பம் அதற்குள் இருக்கும் என்பது உறுதி. எதிர்பார்த்தபடி ஐரோப்பிய நாடுகள் முழுமையாக இஸ்ரேலின் பின்னால் அணி திரளவில்லை. அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பிளவுபட்டு கிடக்கிறது. வெளி நாடுகளில் ஆட்சி மாற்றம் மேற்கொள்வது நம்முடைய வேலை இல்லை என்று ஒரு தரப்பும், இஸ்ரேலை விட்டுத்தரக்கூடாது என்று மற்றொரு தரப்பும் சொல்கின்றனர். அமெரிக்கா மட்டும் தான் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறது. ஈரானுக்கு ஆதரவாக வடகொரியா, சீனா, துருக்கி, ரஷ்யா போன்ற பல நாடுகள் பின்புலத்தில் அணி திரண்டுள்ளன.

ஈரானின் அரசியல் தலைமையை அழிக்க வேண்டும் என்று இஸ்ரேல் நினைத்தால் அது சாத்தியம் தான்.ஆனால் அப்படி செய்வதால் இஸ்ரேல் ராணுவ, அரசியல் இலக்குகள் எட்டப்பட முடியுமா? என்பது சந்தேகம் தான். அதனால்தான் அதை இஸ்ரேல் செய்யாமல் உள்ளது. இஸ்ரேல் – ஈரான் விவகாரம் மூன்றாம் உலகப் போருக்கு நிச்சயம் இட்டுச் செல்லாது. காரணம் நேரடியாக ரஷ்யா இந்த போருக்கு வராது. ஏனென்றால் ரஷ்யா மற்றொரு போரில் ஈடுபடாது. தன்னுடைய அடிப்படை நலன்கள் பாதிக்கப்பட்டால் ஒழிய சீனா நேரடி போருக்கு வராது. உலகில் உள்ள ஒரு புத்திசாலி நாடு சீனா. அதனால் அது போருக்கு வராது. அரபு நாடுகள் எந்த அளவுக்கு இஸ்ரேலை வெறுக்கின்றவோ, அந்த அளவுக்கு ஈரானையும் வெறுக்கின்றன. எனவே  ஈரானுக்கு ஆதரவாக எந்த இஸ்லாமிய நாடும் வராது. ஈராக்கில் அமெரிக்கா வந்து தாக்குதல் நடத்தினால், அங்குள்ள ஈரான் ஆதரவு சக்திகள் தாக்குதல் தொடங்கக்கூடும். ஆனால் 3வது உலகப் போர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் ஈரானுக்கு மறைமுகமாக உதவி செய்ய முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ