- Advertisement -
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பக்கிரிசாமி பாலியல் வழக்கில் கைது
பாலியல் தொல்லை வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் திமுக நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி. இவர் விருத்தாசலம் வைத்தியலிங்கா நர்சரி பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுமியின் பிறப்புறப்பில் ரத்தம் வந்ததை அடுத்து வலியால் துடித்த சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான புகாரை அடுத்து, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையி்லும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்நிலையில் பக்கிராமி போக்சோ சட்டத்தில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.