spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமுதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் அணி!

முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் அணி!

-

- Advertisement -

 

முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் அணி!
Photo: IPL Official Facebook Page

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 62வது லீக் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 15) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

we-r-hiring

‘ஜெயிலர்’ படத்தை அடுத்து தனுஷ் உடன் கூட்டணி அமைக்கும் நெல்சன் திலீப்குமார்!

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில், சுப்மன் கில் 101 ரன்களையும், சாய் சுதர்சன் 47 ரன்களையும் எடுத்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில், புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

இதைவிட வலிமையுடன் திரும்பி வருவேன்… ”ஏஜென்ட்” தோல்வி குறித்து வெளிப்படையா பேசிய அகில் அக்கினேனி!

குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில், முகமது ஷமி, மோஹித் சர்மா தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ