spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹரி இயக்கத்தில் மீண்டும் இணையும் பிரியா பவானி சங்கர்...... எந்த படத்தில் தெரியுமா?

ஹரி இயக்கத்தில் மீண்டும் இணையும் பிரியா பவானி சங்கர்…… எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

பிரியா பவானி சங்கர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.அந்த வகையில் தற்போது நடிகர் விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது .

விஷால் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில்
நடிகர் விஷால் தற்போது  தனது 34 ஆவது படத்தை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

we-r-hiring

தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு விஷால் மற்றும் ஹரி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரியா பவானி சங்கர் விஷாலின் 34 வது படத்தில் இணைந்துள்ளார் என்பதை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். ப்ரியா பவானி சங்கர் ஏற்கனவே ஹரி இயக்கிய யானை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ