
திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் நீர் பேருக்கு அதிகம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடங்களில் மட்டும் பொதுமக்கள் இறங்க மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

‘ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி’- அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு!
ஆடி 18 திருநாளைக் கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர். 10 வயதுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆற்றில் இறங்குவதை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கவும், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
குடியரசுத் தலைவரிடம் மணிப்பூர் குறித்து அறிக்கை அளித்த எதிர்க்கட்சிகள்!
திருச்சி மாநகரம், லால்குடி வட்டம், திருவெறும்பூர் வட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முசிறி வட்டம், தொட்டியம் வட்டம் என அனுமதிக்கப்பட்ட 57 இடங்களில் மட்டுமே மக்கள் ஆற்றில் இறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.