Homeசெய்திகள்சினிமாமும்பையில் பிரபாஸூக்கு 120 அடி உயர பிரம்மாண்ட கட்அவுட்

மும்பையில் பிரபாஸூக்கு 120 அடி உயர பிரம்மாண்ட கட்அவுட்

-

- Advertisement -
கேஜிஎஃப் எனும் பிரம்மாண்ட படைப்பின் மூலம் இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீல். ஒரு குறுகிய வட்டத்தில் இருந்த கன்னட சினிமாவை உலகளவில் தூக்கிச் சென்றது கேஜிஎஃப் திரைப்படம். உலகம் முழுவதும் இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் சலார்.

ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. முதலில் படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பணிகள் முடிவடையாததால், டிச.22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இப்படத்தின் முதல் தோற்றம், ட்ரைலர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது ரிலீஸ் ட்ரைலரும் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபலமான ஆர் மாலில் சலார் திரைப்பட பிரபாஸூக்கு சுமார் 120 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட் அவுட்டானது ஆர் மாலின் கட்டடத்தை விட உயரமாக இருப்பதால், பாகுபலி படக் காட்சியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

MUST READ