- Advertisement -
ஒரு திரைப்படத்திற்காக மட்டும் தனது எல்லைகளை தாண்டி சுமார் 5 ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளதாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகின் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். 90-களில் தொடங்கி இன்றுவரை ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி தமிழிலும் பிருத்விராஜ் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அண்மைக் காலமாக அவர் வில்லன் வேடத்தில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். தொடக்கத்தில் மலையாள படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த பிருத்விராஜ், அடுத்து தெலுங்கு படமான சலார் திரைப்படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக நடித்தார். இதில், பிருத்வியின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதனிடையே நடிப்பை தவிர இயக்கத்திலும் பிருத்விராஜ் ஆர்வம் காட்டி வருகிறார். மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இயக்குநராக அறிமுகமான அவர், அப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்து லூசிபர் 2-ம் பாகத்தை இயக்கி வருகிறார்.



