Homeசெய்திகள்தமிழ்நாடு1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலில் மாசி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழா!

1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலில் மாசி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழா!

-

- Advertisement -

 

1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலில் மாசி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழா!

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கொடியிடை நாயகி சமேத அருள்மிகு மாசிலாமுனிஸ்வரர் திருக்கோயிலில் 45- ஆம் ஆண்டு மாசி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பிரசித்திப் பெற்ற 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 45- ஆம் ஆண்டு மாசி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தமுன்னாள் அமைச்சர் சாமு நாசருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தெப்பத்தில் கடவுள் வழிபாடுகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் தெப்ப திருவிழா துவக்கி வைக்கப்பட்டது.

1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலில் மாசி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழா!

இந்தத் தெப்ப உற்சவத்தில் மூன்றுமுறை வலம் வந்த மாசிலாமுனிஸ்வரர் பின்பு தெப்பத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்பு ஆலயம் அருகே அமைக்கப்பட்ட பழங்கால மண்டபத்தில் இருந்து மாட வீதிகளில் உற்சவ பஜனைகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

பின்பு அனைத்து பக்தர்களுக்கும் முன்னாள் அமைச்சர் சாமு நாசர் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், தி.மு.க.வின் ஆவடி நகர செயலாளர் பேபி சேகர், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட 10,000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

MUST READ