பிரேமலு படத்தை பாராட்டிய நடிகை நயன்தாரா
- Advertisement -
மலையாளத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த பிரேமலு படத்தை கண்டு ரசித்த நடிகை நயன்தாரா, அத்திரைப்படத்தை பாராட்டி இருக்கிறார்.

அண்மைக் காலமாக மலையாளத்தில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். வெளியாகும் மொழி மலையாளமாக இருந்தாலும், படம் கேரள ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வெற்றி பெறுகிறது. இறுதியாக வெளியான பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் பிரேமலு ஆகிய படங்கள் இதுவரை இல்லாத வகையில் வசூலை குவித்து மலையாள சினிமாவில் சாதனைகளை படைத்து வருகின்றன. இதில் பிரேமலு திரைப்படம் கடந்த மார்ச் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜூ, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். கிறிஸ் ஏ.டி. இத்திரைப்படத்தை இயக்கி இருக்கின்றனர். படத்தை ஃபஹத், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். விஷ்ணு இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் மலையாளத்தில் மாபெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, படம் தெலுங்கு மற்றும் தமிழில் டப் செய்யப்பட்டது.

அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் படம் ஹிட் அடித்தது. படம் பார்த்த மகேஷ் பாபு, ராஜமௌலி ஆகியோர் படத்தை பாராட்டினர். இந்நிலையில், பிரேமலு படத்தை கண்டு ரசித்த நயன்தாராவும் படத்தை பாராட்டி இருக்கிறார். நல்ல திரைப்படங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.