- Advertisement -
டெல்லி, மும்பையின் பிபிசி செய்தி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.


டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். பிபிசி ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் கலவரம் குறித்த ஆவண படத்தை பிபிசி வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த வருமான வரிச் சோதனை நடைபெறுவது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
பிபிசி அலுவலகத்தில் காலை 11.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
