Homeசெய்திகள்கட்டுரைதைலாபுரம் வர விரும்பிய அமித்ஷா! ஸ்டாலினை சந்திக்க போகும் ராமதாஸ்?

தைலாபுரம் வர விரும்பிய அமித்ஷா! ஸ்டாலினை சந்திக்க போகும் ராமதாஸ்?

-

- Advertisement -

அதிமுக பலவீனமடைந்துள்ள சூழலில் மருத்துவர் ராமதாஸ் அந்த கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்றும், அவர் திமுக கூட்டணிக்கே செல்ல விரும்புவார் என்றும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாஸ் உடன் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பின் பின்னால் உள்ள அரசியல் கணக்குகள் தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியுபுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மருத்துவர் ராமதாஸ் உடன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்து பேசியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழக வருகைக்கு முன்னதாக இருவரையும் சமாதானம் செய்து, கூட்டணி கட்சி தலைவராக அன்புமணியை அங்கே நிறுத்த வேண்டும் என்றுதான் குருமூர்த்தி இவ்வளவு பிரயத்தனம் செய்து வந்திருக்கிறார். தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துவிட்டு அன்புமணி வந்தாரா? என கேள்வி எழுப்புகிறார். அவர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்ததே அன்புணியின் ஆளாக தான். அப்படி இருக்கிறபோது அன்புமணி வந்ததே தனக்கு தெரியாது என்று, இதற்காக சைதை துரைசாமியை சாட்சிக்கு அழைக்கிறார். என்ன ஒரு நாடகம் என்று பாருங்கள்.

யார் கட்சியை உடைக்க காரணமாக இருக்கிறார்களோ? அவர்களே சமாதானப்படுத்த வருகிறார்கள். ராமதாஸ் தன்னையும், தனது சமூகத்தையும் நம்புகிறார். ஆனால் அன்புமணி டெல்லியை நம்புகிறார். ஓபிஎஸ் பாஜகவை நம்பினார். குருமூர்த்தி சொன்னார் என்று ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று தியானம் இருந்தார். இன்றைக்கு கட்சிக்கு அவருக்கும் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. ராமநாதபுரத்தில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். பாஜகவை நம்பினால் ஒருவரின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்பதற்கு ஓபிஎஸ்தான் சிறந்த உதாரணம். தமிழ்நாட்டில் அடுத்த ஓபிஎஸ் ஆக அன்புமணியை மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவுக்கு வாக்கு வங்கி என்பதே கிடையாது. சாதி ரீதியாக, சமூக ரீதியாக வாக்காளர்களை பிரிப்பது. கட்சிகளை உடைப்பது. சாதி ரீதியாக பிளவுகளை ஏற்படுத்துவதை சோசியல் இன்ஜினியரிங் என்று வடநாட்டில் சொல்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும், இடைப்பட்ட சாதியினருக்கும் இடையே இருக்கிற முரண்பாடுகளை கூர்தீட்டுகிற வேலையை தான், ஒவ்வொரு சமூகரீதியாக செய்கிறார்கள். கன்னியாகுமரியில் இருந்து பொன்.ராதா, கொங்கு மண்டலத்தில் இருந்து அண்ணாமலை போன்றவர்களை உருவாக்கி இருக்கிறார்கள். பாமக உடைந்ததில் பாஜகவுக்கு ஆதாயமாகும். அதிமுக வலிமை இழந்துவிட்டது. அவர்களால் அதிகாரத்தை கைப்பற்றுகிற இடத்திற்கு ஒருபோதும் வர முடியாது. அதிமுக வீழ்ந்துவிட்ட பிறகு அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறது என்பதும், வீழ்ச்சிக்கு காரணமான பாஜக உடன் கூட்டணி வைப்பதும் வேண்டாம் என்கிறார் ராமதாஸ்.

அன்புமணியிடம் தலைமைப் பண்பு இல்லை. அதனால் இந்த கட்சியை நான் கையில் எடுக்கிறேன் என்று ராமதாஸ் சொல்கிறார். அவர் 234 தொகுதிகளை குறிவைக்க வில்லை. 50 தொகுதிகளில் வன்னியர் வாக்குகள் செரிந்துள்ளது. இந்த 50 தொகுதிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார். தற்போதைய சூழலில் திமுக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பது கள எதார்த்தம். எப்போதும் திமுக மீது அதிருப்தி வந்தால் அதிமுக அறுவடை செய்யும். அதிமுக மீது எதிர்ப்பு வந்தால் திமுக அறுவடை செய்யும். தற்போதைக்கு அதிமுக பலவீனமடைந்து உள்ளதால், இந்த நேரத்தில் எதற்காக தோற்றுபோகும் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.

ராமதாசின் அரசியல் வரலாற்றில் அவரது கோரிக்கைகளை முதன் முதலாக நிறைவேற்றித் தந்தது திமுக அரசுதான். 1989ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கலைஞர்தான் அவர்களுக்கு 21 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தார். பாமக, திமுக கூட்டணியுடன் இருக்கிற காலகட்டத்தில் அதிகப்படியான அங்கீகாரத்தை பெற்றுள்ளார்கள். பேர வலிமையை கூட்டுவதற்காக தான் எதிர் அணிக்கு செல்வாரே தவிர, எங்கே அரசியல் இருக்கிறது என்பது அவருக்கு தெரியும். கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றுதான் ராமதாஸ் விரும்புகிறார். அதற்கான ஒரு முயற்சியாக தான் பண்ருட்டி வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவனை சந்திக்கிறார். அன்புமணியின் வளர்ச்சிக்கு தடையாக வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் வேல்முருகனை கட்சியில் இருந்து ராமதாஸ் வெளியேற்றினார். தற்போது வேல்முருகன் மூலமாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமா? என்று பார்க்கிறார். பாமகவின் பொதுக்குழுவை கூட்டுகிற அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது. திலகபாமாவை நீக்குவது மட்டுமல்ல, தேவைப்பட்டால் அன்புமணியை கூட நீக்குவார். தற்போது அன்புமணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா முழுக்க ஆட்சி செய்தாலும் பாஜகவால் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியவில்லை. வாக்கு வங்கியை சொல்லிக்கொண்டு திரிகிறார்களே தவிர, அவர்காளல் வெற்றி பெற முடியவில்லை. பாஜக அன்புமணியை தன்பக்கம் இழுத்துக்கொள்ள முயன்றால், அவர் தலைவர் பதவியில் இல்லாமல் தான் போவார். அது தோல்வி அரசியலாகத்தான் மாறும். குருமூர்த்தி போன அன்றே மோசமான அரசியலுக்கு இன்னொரு அறிகுறியாக மாறிவிட்டது. பாமகவுக்கு எதிர்காலம் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் பாஜக கூட்டணியில் இருக்கக்கூடாது. தங்களுடைய தனித்த வலிமையை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் ராமதாசின் விருப்பமாக உள்ளது.

ஜான் ஆரோக்கியசாமி என்பவர் தான் பாமகவுக்கு முன்னர் தேர்தல் பணியாற்றினார். தற்போது தவெகவில் இருக்கும் அவர், பாமக உடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தைக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜக உடன் கூட்டணி அமைக்க யாருக்கும் விருப்பம் இல்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவற்றை வைத்து மிரட்டிதான் அதிமுக கூட்டணிக்கு சென்றார். பாமகவை காப்பாற்ற ஒரே வழிதான் உள்ளது. அன்புமணி சிபிஐ வழக்கை எதிர்கொண்டு சிறைக்கு செல்ல வேண்டும். ஜெயலலிதா, கனிமொழி, ஆ.ராசா போன்றவர்கள் எப்படி வழக்கில் வென்றார்களோ அதுபோல அன்புணியும் வழக்கை எதிர்கொள்ள சிறைக்கு போக வேண்டும்.

MUST READ