Homeசெய்திகள்கட்டுரைபாகிஸ்தானை ஆதரிக்கும் சீனா! தேன்கூட்டில் கை வைக்காதீங்க! எச்சரிக்கும் பாலச்சந்திரன்!

பாகிஸ்தானை ஆதரிக்கும் சீனா! தேன்கூட்டில் கை வைக்காதீங்க! எச்சரிக்கும் பாலச்சந்திரன்!

-

- Advertisement -

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானை சீனா ஆதரிக்கிறது. உரிய ஆதரங்களை வழங்கி பாகிஸ்தானிடம் தீவிரவாதிகளை ஒப்படைக்க கோரினல் உலக நாடுகள் நம்மை ஆதரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை இந்தியா கையாண்டு வரும் விதம் குறித்தும், உலக நாடுகளின் ஆதரவை பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- பஹல்காமில் நடைபெற் தாக்குதல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மிகவும் கீழ்த்தரமாக எந்தவித பாதுகாப்பும் இல்லாத சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றுள்ளார்கள். மனைவி முன்னால் கணவரை சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். எந்த விதத்தில் பார்த்தாலும் இது இறக்கமற்ற கொடுரமான செயலாகும். இதற்கு நம்முடைய பதிலடி எப்படி இருக்க வேண்டும் என்றால் இதற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதிகள்  பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கு உள்ளூர் மக்கள் சிலர் உதவியுள்ளனர் என்று தற்போதைக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பஹல்காமில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக 2, மூன்றுவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவர் சொல்கிறார், திடீரென எங்கோ இருந்து துப்பாக்கி குண்டுகள் வந்தது என்கிறார். மற்றொருவர் மத அடையாளங்களை கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் இந்துக்களை மட்டும் சுட்டுக் கொன்றார்கள் என்று சொல்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளை அழைத்துச்சென்ற ஒருவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். அவர் தீவிரவாதிகளின் துப்பாக்கியை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் தன்னுடைய உயிரை இழந்தார் என்று சொல்கிறார்கள்.

அது இந்து - முஸ்லிம் மோதல் இல்லை .... பஹல்காம் தாக்குதல் குறித்து காஜல் அகர்வால்!

முதலில் மத்திய அரசு தெளிபடுத்த வேண்டியது என்ன என்றால்? இது தீவிரவாதிகளுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சண்டை எனறு தெளிவுபடுத்த வேண்டும். இது இந்துக்களுக்கு, முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் கிடையாது. மகாத்மா காந்தியை கோட்சே என்கிற தீவிரவாதி சுட்டுக்கொன்றான். அவன் இந்து மதத்தை சேர்ந்தவன் என்பதால், இந்து மதத்தை சேர்ந்த எல்லோரும் தீவிரவாதிகள் ஆவது கிடையாது. அன்றைக்கு மகாத்மா காந்தி கொல்லப்பட்ட உடன் நாடு முழுவதும் என்ன சொன்னோம் என்றால்? மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். அவரை கொன்றவர் ஒரு முஸ்லிம் அல்ல என்று தெளிவாக சொன்னோம். அனாவசியமாக முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டுவிடக் கூடாது என்று மிகத் தெளிவாக சொன்னோம்.

அதேபோல் பகல்காம் தாக்குதலில்  கொல்லப்பட்டவர்களுக்கு உதவ காஷ்மீர் மக்களும், காஷ்மீர் அரசு மற்றும் மத்திய அரசும் முனைப்போடு இருக்கிறது. தீவிரவாதிகளை பிடிப்பதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுதான் நம்முடைய அணுகு முறையாக இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசின் அணுகு முறை அப்படி இல்லை. உடனடியாக சிந்து நதியில் தண்ணீரை நிறுத்துகிறார்கள். இங்குள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறு என்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் நாம் செய்ய வேண்டியது உறுதியாக பாகிஸ்தானில் இருந்து வந்தர்கள் தான் செய்தார்கள் என்று தெரிந்தால், அதற்கான ஆவணங்களை பாகிஸ்தானிடம் வழங்கி, அவர்களை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டும். அப்படி அவர்கள் ஒப்படைக்காவிட்டால், அவர்கள் மீது நாம் படையெடுத்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். ஒரு நாட்டின் மீது படையெடுத்தால் உலக நாடுகளின் ஆதரவு நமக்கு தேவையாகும். ஏற்கனவே சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. அவர்கள் பாகிஸ்தான் உடன்தான் இருப்பார்கள். எதிரிக்கு எதிரி நண்பர் என்ற அடிப்படையில் ரொம்ப நாட்களுக்கு முன்னதாகவே நண்பர்கள் ஆகிவிட்டார்கள். அமெரிக்காவும், பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாகும். அதனால் இருதரப்பும் சமாதானமாக போங்கள் என்றுதான்  சொல்வார்கள்.

பாகிஸ்தானில் இருந்து ஒவ்வொரு தீவிரவாதிகளாக அனுப்பி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மும்பை தாக்குதலின்போது அவர்கள் எல்லாம் பாகிஸ்தானியர்களே இல்லை என்று சொன்னார்கள். கசாப் என்பவரின் தாய் பாசத்தில் கிளம்பி வந்து விட்டார். அப்போதுதான் சந்தேகம் இன்றி அவர் பாகிஸ்தான் குடிமகன் என்பது உறுதியானது. அதனால் இன்றைக்கு சந்தேகம் இன்றி நிருபித்தால் நடுநிலையான நாடுகள் நம்மைத்தான் ஆதரிக்கும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். அமெரிக்காவில் ஒரு 9/11 சம்பவம் நடைபெற்றது. அந்த ஒரு நிகழ்வுக்கு பிறகு அப்படிபட்ட மிகப்பெரிய தாக்குதல் இன்றுவரை அமெரிக்காவில் நடைபெறவில்லை. அதற்கு காரணம்  அவர்கள் தங்களது உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்புகளை இறுக்கமாக வைத்துவிட்டார்கள்.

மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை குறித்த எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும். அசம்பாவிதம் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும். நம் நாட்டில் பொதுமக்களுக்கு தெரியாத 100க்கு 99 விஷயங்களை போலீசார் தடுத்தி நிறுத்தியுள்ளனர். நான் அரசாங்கத்தில் இருந்து பார்த்துள்ளேன். ஆனால் கடந்த 12 வருடங்களில் மத்தியில் வெற்று ஆரவாரம் அதிகமாக உள்ளது. ஒரு சொட்டு தண்ணீர் போகாது என்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட போவது அப்பாவி பொதுமக்கள்தான். அப்படி செய்தால் எத்தனை நாடுகள் ஆதரிக்கும்? நாம் சரியான ஆதாரங்களை வைத்துக்கொண்டு கேட்க வேண்டும். இன்றைக்கு வரைக்கும் இந்த அரசாங்கம் மீது தெளிவு ஏற்படவில்லை. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தண்ணீரை எப்படி நிறுத்தப் போகிறார்கள். சிந்து மற்றும் 5 உபநதிகள் உள்ளன. இதில் கிழக்கில் பாயும் 3 நதிகள் இந்தியாவுக்கும், மேற்கில் பாயும் 3 நதிகள் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்பதுதான் ஒப்பந்தம். இதில் 6 நதிகளில் செல்லும் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு தான் சொந்தமாகும்.

சீனா எதற்காக பாகிஸ்தானுடன் சேர்கிறார்கள் என்றால்? உலக அரங்கில் இன்றைக்கு நாம் சீனாவை விட பல மடங்கு கீழே இருக்கலாம். ஆனால் ஜனநாயகம் என்கிற மிகப்பெரிய ஆயுதம் நம்மிடம் உள்ளது. அதனால் உள்நாட்டில் மிகப்பெரிய கலகங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. சீனாவில் பொருளாதாரம் என்பது தனியார் மய சித்தாந்தம். அரசியல் என்பது கம்யூனிச சித்தாந்தம். இவை இரண்டுக்கும் இடையில் அடிப்படையில் முரண்பாடுகள் உள்ளன. இது எதிர்காலத்தில் எப்படி கொண்டு செல்லும் என்று சீனாவிலும், மற்ற நாடுகளிலும் அச்சம் உண்டு. அமெரிக்கா நம்பிக்கொண்டிருப்பதே சீனாவில் உள்நாட்டு பிரச்சினையால் நாடு உடையும் என அமெரிக்கா நம்புகிறது. ஆனால் அப்படி நடைபெற வாய்ப்பு குறைவு. சீனாவுக்கு என்ன அச்சம் என்றால்? நம்மை விட ஜனநாயகம் என்கிற பெரிய ஆயுதத்தை வைத்திருக்கிறார்கள்.

சீனாவில் 7 முதல் 8 பிராந்தியங்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி உள்ளது. அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஒருநாள் நம்மை மிஞ்சி விடுவார்கள் என்கிற பயம் உள்ளது. அதனால் பொருளாதார பலத்தை தக்கவைக்க இந்தியா பிரச்சினைகளுக்குள் முழ்கி கிடக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதனை மீறிதான் இந்தியா தனது வளர்ச்சியை பார்க்க வேண்டும். இந்தியா போரை தொடங்கினால் 15 நாட்களில்  பொருளாதாரம் சீரழிய தொடங்கும். அதில் இருந்து மீள சில வருடங்கள் ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ