Homeசெய்திகள்கட்டுரைஇவர்களின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் அவதூறு பரப்புகிறார்... உண்மையை உடைக்கும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்!

இவர்களின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் அவதூறு பரப்புகிறார்… உண்மையை உடைக்கும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்!

-

- Advertisement -

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தூண்டுதலின் பேரில்தான் சீமான் பெரியார் குறித்து அவதூறு பரப்புவதாகவும், அவரது ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் அவதூறு கருத்து தொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:- என்னை பொறுத்தவரை தந்தை பெரியார் குறித்து சீமான் அறியாமையிலேயோ, அல்லது ஆணவத்திலேயோ பேசியதாக நினைக்கவில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ்-ன் தூண்டுதலின் பேரில் பேசுகிறார். திராவிடத்தை ஒழிப்பதுதான் என் கொள்கை என்கிறார் சீமான். ஆர்எஸ்எஸ்-ன் கொள்கையும் அதுதான். ஆர்.எஸ்-எஸ்ன் ஒரு கிளையாக சீமான் செயல்படுகிறார். அது அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலையாக இருக்கலாம். அதற்காக அவருக்கு பெரும் வருமானமும் இருக்கலாம். ஆனால் ஒன்றை நாம் அழுத்தமாக சொல்ல வேண்டும். ஐயா பெரியார் சொன்னதற்கு எங்கே ஆதாரம் என்று கோவை ராமகிருஷ்ணன் அவரது வீட்டிற்கே சென்றுள்ளனர். எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு கூட சீமானிடம் பதில் இல்லை. திட்டமிட்டு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் பேசுகிறார். அப்படி கலவரம் வருமானால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆர்.எஸ்.எஸ், பாஜக-காரர்க்ள் காத்திருக்கிறார்கள். அதற்கு இவர்கள் சீமானை பயன்படுத்துகிறார்கள். சீமானை பொருத்தவரை பணமும், பதவியும் மட்டும் போதும். தன்னலத்திற்காக எதையும் செய்யக்கூடிய மிகவும் இழிவான நபர் சீமான். சீமானின் இந்த அணவம், இந்த ஆட்டம் விரைவில் அடங்கும்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்பவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு அடியாள். தமிழ்தேசியம் என்பது அவர் முன்வைக்கின்ற ஒரு சொல்லாடல் மட்டுமே. உண்மையாக தமிழ்தேசிய உணர்வை தமிழ்நாட்டில் வளர்த்தது, திராவிட இயக்கம் தான். புரட்சி கவிஞர் பாரதி தாசனின் பாடல்களை திராவிட இயக்கம் மேடைகள் தோறும் முழங்கவில்லை என்றால், தமிழ் உணர்வை ஊட்டி இருக்கவில்லை என்றால் இன்றைக்கு தமிழ் தேசியமே வளர்ந்திருக்காது. நீங்கள் உண்மையிலேயே தமிழ் தேசியத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் கூட கிளை மரத்தில் தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். கிளை மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுபவன் அடி முட்டாளாகத்தான் இருப்பான். சீமான் பேசும் தமிழ் தேசியம் உண்மையும் இல்லை. தமிழ் தேசியத்திற்கும் அவருக்கும் தொடர்பும் இல்லை. அதனை வளர்த்தது திராவிடம். இவர் வெறும் ஆர்.எஸ்-எஸ்ன் அடியாள்.

முதலில் தான் பெரியாரை புழ்ந்து பேசியதாகவும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்த பின்னர், 2010ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதிக்கு பிறகு தான் பெரியாரை புகழ்ந்து பேசவில்லை என்கிறார் சீமான். இவர் நாம் தமிழர் கட்சி தொடங்கி இன எழுச்சி மாநாடு நடத்தி புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அட்டையின் பின்புறத்தில் பெரியாரின் புகைப்படம் முதலில் உள்ளது. இதேபோல், பெரியாரை பாராட்டி இளமுருகு என்பவர் எழுதியுள்ள கட்டுரையும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே சீமான் பேசுவது எல்லாம் பொய், புறட்டு, பித்தலாட்டம். தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டிய அழிவு சக்தி சீமான் ஆவார்.

தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்புவதால் சீமானுக்கு அரசியல் லாபமா? அல்லது வேறு லாபமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பெரியார் பற்றி இவர்கள் எல்லாம் பேசுவதற்கு நாங்கள் கவலைப்படவில்லை. இது ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்றைக்கு திராவிட இயக்கம் தோன்றியதோ அன்றே அதற்கான எதிர்ப்பும் தொடங்கி விட்டது. சீமான் யார் யாரையோ கொண்டு வந்து பெரியாருக்கு எதிராக நிறுத்துகிறார். கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சிதம்பரத்தை விட பெரிய தலைவரா? பெரியார் என்று சீமான் கேட்கிறார். அத்தகைய உ.வ.சியே போற்றிய, புகழ்ந்த தலைவர் தான் பெரியார் என்பது சீமானுக்கு தெரியாது. படித்தால் தான் எதுவும் தெரியும். சீமான் எதுவும் தெரியாதவர் என்பதால் தான் ஆர்எஸ்எஸ் அவரை நிறுத்துகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ