Homeசெய்திகள்கட்டுரைமோடி சரண்டர்! பின்வாங்கியது ஒன்றிய அரசு! ஸ்டாலினுக்கு முதல் வெற்றி!

மோடி சரண்டர்! பின்வாங்கியது ஒன்றிய அரசு! ஸ்டாலினுக்கு முதல் வெற்றி!

-

- Advertisement -

புதிய கல்விக்கொள்கையின் பாதிப்புகளை எடுத்துக்கூறினால் தமிழர்கள் பிரிவனைவாதிகள் பட்டியலில் வைக்கப்படுவதாக பத்திரிகையாளர்கள் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் தங்களது எதிர்ப்பு நவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தெலுங்கானா, பஞ்சாப் மாநிலங்களில் சிபிஎஸ்சி பள்ளிகளில் தாய்மொழி கட்டாயம் என மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  நிதி வழங்கும் விவகாரத்தில் புதிய முறையை செயல்படுத்துவோம் என்று இறங்கி வந்துள்ளார். மத்திய அரசு பின்வாங்கி தான் ஆக வேண்டும். காரணம் மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க முடியாது. நீதிமன்றத்திற்கு சென்றால் மத்திய அரசுக்குதான் குட்டு விழும். தேசிய அளவில் கல்வி மாநிலங்களின் பட்டியலில் இருந்ததுதான். அதை வெட்டியாக பொதுப்பட்டியலுக்கு எடுத்துச்செல்கிறார்கள். அதுவே தவறு என்பதுதான் எங்களுடைய கருத்து. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் காமராஜர் காலத்தில் எவ்வளவு பெரிய திட்டம் கொண்டுவந்து ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கையை  பெருக்கினார்கள். அதற்கு முன்பு சிந்தனை சிற்பி சிங்காரவேலர் காலத்திலேயே நாம் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்துவிட்டோம். நமது மதிய உணவு திட்டம் 80, 90 வருஷங்கள் ஆகிறது. நான் 4ஆம் வகுப்பு படிக்கும்போது காமராஜரின் மதிய உணவு திட்டம் அறிமுகமாகியது. சாம்பார் சாதம் கிண்டி போட்டனர். அதற்கு பின்னர் இந்த திட்டத்தில் எத்தனையோ முன்னேற்றங்களை பார்த்துள்ளேன். இன்றைக்கு ஸ்டாலின் காலகட்டத்தில் காலை உணவுத்திட்டம் வரை பார்க்கிறோம். அப்போது மாநில அரசுகள்தான் இதை செய்ய முடியும். ஒரு மாநில அரசுக்கு தன்னுடைய குடிமக்கள், அவர்களது குழந்தைகளுக்கு என்ன கல்வியை தர வேண்டும்? எதுவந்து அவர்களது வாழ்க்கைக்கு நல்லது. அதற்கு நாம் என்ன ஊக்கம் தர வேண்டும் என்பது தெரியும்.

தமிழகத்தில் அரசு ஆரம்பள்ளி முதலே பல வசதிகளை கொடுக்கிறோம். 5ஆம் வகுப்பு வரை இலவச காலை உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது. அடுத்த அரசாங்கம் வந்தால் 5ஆம் வகுப்பு என்பதை 8ஆம் வகுப்பாக உயர்த்தலாம். இலவச சைக்கிள் திட்டம் ஜெயலலிதா காலத்தில் வழங்கப்பட்டது. முதலில் சில கட்டுப்பாட்டுகளுடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைவருக்கும் வழங்கப்படுகிறது. கல்வியை பொருத்தவரை நாம் தொடர்ந்து பெரிய அளவில் மேம்படுத்தி வருகிறோம். காரணம் நிறைய மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும், படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்காகத்தான் நாம் 9ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டத்தை கொண்டுவந்ததே. எங்கள் காலத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு தேர்வு இருந்தது. அப்போது நாம் முயற்சித்து ஒழித்துக்கட்டிய திட்டங்களை எல்லாம், திருப்பி நம்மிடமே கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இதெல்லாம் காமராஜர் காலத்திலேயே வேண்டாம் என முடிவு செய்த விஷயங்கள் ஆகும்.

"சென்னையில் வரலாறு காணாத மழை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இருமொழி கொள்கை என்றால் எதற்கு? இந்தியை படிக்க மாட்டோம் என்று சொல்வதற்கா? நீங்கள் கற்பதற்கு திறன் இருந்தால் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் எதெல்லாம் பாடமாக இருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. கற்பதை பற்றிய கேள்வி இல்லை. படிப்பதை பற்றிய கேள்வி. அப்படி படிப்பதை பற்றிய கேள்வி வரும்போது எதை நீங்கள் அடிக்கோளாக கொள்வீர்கள்?. 3வது மொழியாக தெலுங்கு, கன்னடம் மொழி சொல்லித்தருகிறார்கள். 35 மார்க் எடுத்தால்தான் பாஸ் என்கிறபோது, தேர்ச்சி பெறாமல் போகிற பிள்ளைகளின் சதவிகிம் என்பது 90 முதல் 95 சதவீதம் வரை வரும். ஒரு பாடத்தில் பெயில் ஆகிறான் என்றால் 5ஆம் வகுப்பில் தேர்வு வைத்தால் 5ஆம் வகுப்பில் பெயில் ஆவார்கள். 8ஆம் வகுப்பில் தேர்வு வைத்தால், 8ஆம் வகுப்பிலும் பெயில் ஆவார்கள். இன்று பல பிள்ளைகள் தமிழிலிலேயே கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வீட்டில் சொல்லிக்கொடுத்து விடுவார்கள். தமிழ் தெரியாவிட்டாலும் எல்லா பாடங்களிலும் கியூஆர் கோடு உள்ளது. அதை ஸ்கேன் ஸ்செய்து வீடியோவாக பார்த்துவிடலாம். தனியார் பள்ளிகளுக்கு மொழிப்பாடங்களை பொருத்தவரை அரசுப்புத்தகம்தான். அது கலைஞர் காலத்திலேயே சமச்சீர் கல்விமுறை  கொண்டு வந்தாகிவிட்டது. நீதிமன்றம் வரை சென்று அதனை நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுவிட்டது. எவரும் அதில் கை வைக்க முடியாது.

அரசுப்பள்ளி

கூடுதல் மொழி என்ற ஒன்று வரும்போது, சமச்சீர் கல்வியிலேயே அது பொருந்ததாது. மாணவர்களுக்கும் சுமை. மாணவர்கள் இடைநிற்றலையும் அதிகரிக்கும். அதேநேரத்தில் நீங்கள் மூன்று பரீட்சைகள் என்று சொல்கிறீர்கள். புதிய கல்விக்கொள்கை ஒன்று வரும்போதும் இந்த பிரச்சினை இருந்தது. புதிய கல்விகொள்கை 2 வந்தபோதும் பிரச்சினை வந்தது. இப்போது 3வது. இப்போது நான் எல்லோரையும் சேர்த்து கூட்டு முயற்சியாக எடுப்பேன் என்று தர்மேந்திர பிரதான் சொல்கிறபோது, 2020ல் வந்த புதிய கல்விக்கொள்கையை 2025 வரை ஏன் சும்மா வைத்திருந்தீர்கள்?. அங்கங்கு சில மாநிலங்கள் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தின. அப்படி அமல்படுத்திய மாநிலங்களின் அனுபவத்தை கேட்கலாம் அல்லவா? சில மாநிங்கள் மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ளன. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மொழிகளை படித்துவிடுவார்கள். கூடுதலாக ஒரு மொழியை படிக்க வேண்டும். இதில் எத்தனை பேர் பாஸ் செய்தார்கள்?. கூடுதல் மொழியை கற்பிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்களா? ஒரு வகுப்பில் 40 மாணவர்கள், 4 விதமான பாடங்களை விரும்பினால், 4 ஆசிரியர்களை நியமிப்பீர்களா? எப்படி சாத்தியமாகும். அதை விட சுலபமான வழி என்ன என்றால் வெளியில் அவர்கள் கறறுக்கொள்வதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தால் அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் போய் கற்றுக்கொள்வார்கள்.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

ஒரு பெரிய மாநிலம் எனக்கு கன்னடம், மலையாளம், தெலுங்கு தெரிய வேண்டும் என்றால், அதனை கற்றுக்கொடுப்பதற்கான கல்வி நிலையங்கள் அவ்வளவுதான். எதற்கு வந்து அனைத்துப்பள்ளிகளிலும் கொண்டு வருகிறீர்கள். அதற்கு ஆசிரியர்கள் போட போகிறீர்களா? இருப்பதற்கே ஆசிரியர்களை போட முடியலையே? பள்ளிகளில் தற்போது தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கும் பணிச்சுமை தாங்க முடியவில்லை. அப்படி இருக்கையில் இத்தனை மொழிகளை சொல்லித்தர வேண்டும் என்றால் அவர்களும் மிகவும் சிமரப்படுவார்கள். வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தராமல் முட்டாள்த்தனமாக எதோ ஒரு கொள்கை, சிந்தாந்த அடிப்படையில் அனைவரது மண்டைக்குள் திணிப்பேன் என்று மண்டையை கழுவி ஊற்றினாள் எப்படி தாக்குப்பிடிக்க முடியும். இதை எதிர்க்கிறோம். அப்படி எதிர்த்தால் என்ன சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் தேசிய சிந்தனை இல்லாதவர்கள், நாட்டு விரோதிகள் என்கிறார்கள். பிரதமரிடம் கேட்டால், அர்பன் நக்சலைட் என்பார். எல்லோரும் தவறான முடிவு எடுக்கும்போது சொல்லித்தானே ஆக வேண்டும்.

அமித்ஷா வருகிறார். அடித்துவிடுகிறார். மிகப்பெரிய டூப்பாக இருக்கிறது அது. இவ்வளவு விளக்கங்கள் நாம் கொடுத்தால், நாம் பிரிவனைவாதிகள் பட்டியலில் வைக்கப்படுவோம். தமிழ்நாட்டில் உள்ளது தேச விரோத ஆட்சி என்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் எல்லாம் தேச விரோதிகள் என முத்திரைகளை குத்திவிடுவார்கள். ஆனால் உண்மையிலேயே நீங்கள் எப்படி மக்களவை தொகுதி மறுவரையறை கொண்டுவரப் போகிறீர்கள். எத்தனை எண்ணிக்கை? எத்தனை எங்களுக்கு நஷ்டம் வருகிறது என்கிற கேள்விகளை எல்லாம் கேட்கக்கூடாது. ஒரு கூண்டிற்குள் வாழுகிற புறா குஞ்சு போன்று உங்களுடைய ஆட்சியின் கீழ் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். தமிழ்நாடு ஒருநாளும் அதை ஏற்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ