Homeசெய்திகள்கட்டுரைமுருகன் மாநாடு அஜெண்டா! மரண பீதியில் அதிமுக! தலைதெறிக்க ஓடும் பாமக, தேமுதிக!

முருகன் மாநாடு அஜெண்டா! மரண பீதியில் அதிமுக! தலைதெறிக்க ஓடும் பாமக, தேமுதிக!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் கோவில விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதால், அதனுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவும், கூட்டணியில் சேர விரும்புகிற கட்சிகளும் அச்சத்தில் உள்ளதாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக மாநாடு குறித்தும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு குறித்தும் ஆளுர் ஷாநவாஸ்  யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- திருப்பரங்குன்றத்தில் வரும் ஜுன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், சிக்கந்தர் மலை என்று சொல்கிற அளவுக்கு திமுக வளர்த்துவிட்டு இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். அவர் அரசியலமைப்பு சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக்கொண்ட மக்கள் பிரதிநிதி ஆவார். அனைத்து மக்களுக்கும் பொதுவாக நடப்பேன், மக்கள் மத்தியில் பிளவுவாத அரசியலை செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட அமித்ஷா, இப்படி பேசுகிறார். அமித்ஷா விவாதத்திற்கு தயாராக உள்ளாரா? திமுக எம்.பி. ஆ.ராசா விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அவர் தயாரா? யார் சிக்கந்தர் மலை யார்? திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் என்று யார்  சொன்னது? எந்த அமைப்பு  சொன்னது?

சிக்கந்தர் மலையில் அடிவாரத்தில் முருகன் கோவில் உள்ளது. மலையின் மீது காசி விஸ்வநாதன் கோவில் உள்ளது. மேலே மற்றொரு பகுதியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருந்த தர்காவை திமுகவா அல்லது இஸ்லாமிய அமைப்புகளோ மேலே தூக்கிச் சென்று வைத்துவிட்டதா? காலங்காலமாக கோவிலுக்கு செல்பவர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள். தர்காவுக்கு செல்பவர்கள் அங்கே செல்கிறார்கள் இதில் பிரச்சினை எங்கே வந்தது? பிரச்சினை இல்லாத இடத்தில் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஹெச்.ராஜா சொல்கிறார்.

சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுகிற வழக்கம் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் சொல்கிறது. தர்காவுக்குள் என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்று வக்பு வாரியம் தான் முடிவு எடுக்க முடியும். இந்த பிரச்சினைகள் எல்லாம் பேசி தீர்க்கப்பட்டு உரிய ஆவணங்கள் கொடுக்கப்பட்டு, அங்கே இருக்கும் இந்து மக்கள் இயல்பாகவே அதனை பார்க்கிறார்கள். பாஜக கூட்டத்திற்கு வெளியூர்களில் இருந்துதான் ஆட்களை கூட்டி வந்தார்கள் உள்ளுர் மக்கள் யாரும் அவர்களின் போராட்டத்திற்கு வரவில்லை. எத்தனையோ இடங்களில் கோவில்களும், தர்காக்களும் அருகருகே அமைந்துள்ளன. அங்கு சென்று கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? ஒரு தரப்பு மக்களின் மீது மற்றொருவர் சென்று ஆதிக்கம் செலுத்துவதாகும். அதுதான் ஒற்றுமையை சீர்குலைக்கும். யாருடைய நம்பிக்கையையும், யார் மீதும் திணிக்காதீர்கள். திருப்பரங்குன்றம் கோவிலில் தர்காவுக்கு செல்கிற பக்தர்களாலோ, கோவிலுக்கு செல்கிற பக்தர்களாலோ பிரச்சினை என்று எங்காவது உள்ளதா? ஆனால் பாஜக சங் பரிவார் வந்தால் பிரச்சினை வரும். அவர்கள் வந்துவிட்டார்கள் பிரச்சினையும் வந்துவிட்டது.

2026 தேர்தல்! ஆட்சி அமைக்கப் போவது யார்?

முருகன் மாநாட்டை நடத்துதற்கு அவர்களுக்கு முழுமையான உரிமை உள்ளது. ஆனால் முருகன் மாநாட்டை நடத்திவிட்டு கோட்டையில் போய் அமர்வோம் என்கிறார்கள். 2026ல் ஆட்சியை பிடிப்போம். இதற்கு முருகன் மாநாடே அடிப்படையாக இருக்கும் என்கிறார்கள். பழனிக்கு யாத்திரை போகிறவர்களோ, திருண்ணாமலைக்கு கிரிவலம் போகிறவர்களோ, அழகர் ஆற்றில் இறங்குவதை காண செல்பவர்களோ, 2026ல் ஆட்சியை பிடிப்பதுதான் கனவு என்று சொல்வதில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் கோவில்களில், தேவாலயங்களில், தர்காக்களில் திரள்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் ரீதியாக இலக்கு கிடையாது. ஆனால் பாஜக கடவுளை தூக்கிக்கொண்டு வருவது கடவுளுக்காக அல்ல. பக்திக்காக அல்ல. முழுக்க முழுக்க தேர்தல் அரசியலுக்காக. அப்படி பட்ட அயோத்திலேயே பலத்த அடி வாங்கிவிட்டார்கள்.

தமிழ்நாடு எல்லாம் அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அடியை கொடுக்கும். பாஜக இதனால் படுதோல்வியை சந்திக்கும். தற்போது அதிமுக பதறுவதற்கு காரணம் அதுதான். திருப்பரங்குன்றத்தை பாஜக கையில் எடுத்துள்ளதால், வாக்கு கேட்டு மக்களிடம் எப்படி செல்ல முடியும் என்று மரண பயணத்தில் உள்ளனர். அமித்ஷா வந்த பின்னர் அதிமுகவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எல்லோரும் பதற்றத்துடன் பார்க்கிறார்கள். இது பெரிய பாதிப்பில் முடிந்துவிடும் என்று கூட்டணியில் உள்ள அதிமுகவும், கூட்டணிக்கு வர விரும்பும் கட்சிகளும் அச்சப்படுகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ