Homeசெய்திகள்கட்டுரைபிரபாகரன் VS பெரியார்...?  ஆர்எஸ்எஸ் அஜெண்டாபடி மடைமாற்றும் சீமான்... இனியும் நான் பேசலனா... கோபமான ஜெகத்...

பிரபாகரன் VS பெரியார்…?  ஆர்எஸ்எஸ் அஜெண்டாபடி மடைமாற்றும் சீமான்… இனியும் நான் பேசலனா… கோபமான ஜெகத் கஸ்பர்!

-

- Advertisement -

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பெரியாருக்கு எதிராகவும், சமூகநீதிக்கு எதிராகவும் சீமான் திருப்ப முயலும்போது, ஆர்எஸ்எஸ் அஜண்டாபடி மடைமாற்றம் செய்ய முயலும்போது, அதற்கு எதிராக தான் உரக்க பேச வேண்டி உள்ளது என தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களை வைத்தும், புலிகள் அமைப்பை வைத்தும் சீமான் செய்து வரும்போலி அரசியலை தோலுரிக்கும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பாதிரியார் ஜெகத் கஸ்பர் அளித்துள்ள நேர்காணலில்  கூறியிருப்பதாவது :- இலங்கை அதிபராக சந்திரிகா இருந்த, காலத்தில் தணிக்கை தடையிடப்பட்டு, உணவுப் பொருட்கள், எரி பொருட்கள் தடை செய்யப்பட்டபோது, நமது ஊர் வயலும் வாழ்வும் நிகழ்ச்சி கேட்டு, அந்த ஊரில் விவசாயம் செய்து, விடுதலைப்புலிகள் திட்டமிட்டு ஓரளவுக்கு தன்னிறைவு கொண்டுவர முயன்றனர். அப்போது, நாங்கள் உலகம் முழுவதும் சென்று மக்களிடம் சேகரித்து, 25 ஆயிரம் பிள்ளைகளுக்கு 2 ஆண்டுகள் உணவு இட்டோம். அந்த உணவிட்ட பிள்ளைகள்தான் ஒருவேளை இன்று உலகம் முழுவதும் பறந்துசென்று, நமக்கு எதிராகவே பதிவிட்டு கொண்டிருக்கலாம். இந்த நிகழ்ச்சிக்கும் கூட ஒருவேளை பதிவிடுவார்கள். வேலை செய்தோம். எங்கள் முயற்சியால் சிற்றலை என்ற ஒற்றை வானொலியை பயன்படுத்தி  போரினால் சிதறுண்ட 4,656 குடும்பங்களை, என் பட்டியல் படியே நாங்கள் சேர்த்து வைத்தோம். எத்தனை பேருக்கு அகதிகள் அந்தஸ்து உலகப் பரப்பில் வாங்கி கொடுத்துள்ளோம். இதேபோல் அவர்கள் சொல்லட்டும் பட்டியலிட்டு. இவர்களா ஈழ விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

பெரியார் துரோகி, இவர் துரோகி, அவர் துரோகி என போராட்டத்தின் நினைவுகளையும், எல்லோரையும் அந்நியப்படுத்தினார் அல்லவா?  அந்த மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வாங்கித்தரும் அளவுக்கு நீங்கள் களப்போராட்டத்தை முன்னெடுத்து, சிறை நிரப்பும் போராட்டங்கள் நடத்தி, இந்த அரசே களங்கி போகும் அளவுக்கு செய்திருந்தீர்கள் என்றால் நான் உங்கள் பாதத்தில் விழுந்து வணங்கி, நீங்கள்தான் மாபெரும் தலைவன், பிரபாகரனுக்கு அடுத்தபடி போராட்டத்தை முன்னெடுத்து செல்லம் தகுதி உடைய தலைவன் என்று சொல்லி நானே முன்னே இருப்பேன். நீங்கள் செய்யும் அரசியலும் ரஜினிகாந்தின் படமும் எந்த வேறுபாடும் கிடையாது. கத்தார்சிஸ். அதனை  பெரியாருக்கு எதிராகவும், சமூகநீதிக்கு எதிராகவும் நீங்கள் திருப்ப முயலும்போது, ஆர்எஸ்எஸ் அஜண்டாபடி மடைமாற்றம் செய்ய முயலும்போது உரக்க பேச வேண்டி உள்ளது. அதுவரை நாங்கள் வாய் திறக்கவில்லையே. என்றாவது இவ்வளவு கோபப்பட்டு பேசி உள்ளோமா? பேசவில்லையே. அப்போது, தமிழ்நாட்டு உள் அரசியலை நீங்கள் மடைமாற்றம் செய்யும்போது, பெரியார் அரசியல் மீது, பெரியார் மீது நீங்கள் விமர்சனத்தை வைக்கலாம். யார் மீது யார் வேண்டுமானாலும் அரசியலை வைக்கலாம். ஆனால் அடிப்படை அரசியலை மடைமாற்றம் செய்வதற்கு, ஆர்எஸ்எஸ் அஜெண்டா படி செயல்டுகிறீர்கள் என்றால் நாங்கள் அப்படிதான் பார்க்க முடியும். என்று ஈழ விடுதலை போராட்டம் பெரியாரிய சமூகநீதி அரசியலுக்கு எதிராக எப்படி திரும்பியது, திருப்பப்பட்டது, ஏன் திருப்பப்பட வேண்டும்?

தமிழ்நாட்டில் திராவிட அரசியல் சூழல் என்பது தமிழ், சமுகநீதி, இடஒதுக்கீடு, மாநில உரிமைகள் என்ற அடிப்படையில்தான் வெற்றி பெற முடிந்தது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்காக திமுக 2 முறை ஆட்சியை இழந்தார்கள். விடுதலை ப்புலிகளும் தவறு செய்தார்கள். அவர்களையும் விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும். தமிழ்நாட்டு உள் அரசியலுக்குள் வந்து சிக்கிக் கொள்கிறார்கள். இன விடுதலைக்காக நிற்பவர்கள் கட்சி அரசியலுக்குள் வரக்கூடாது. இனத்தை காப்பாற்று வதை மட்டும்தான் கருத்தாக வைத்துக்கொள்ள வேண்டும். கட்சி அரசியலுக்கு வந்தீர்கள் என்றால், பாதி பேரை நீங்கள் பகையாக்கிவிடுவீர்கள். ஏன் வந்து ஈழத்திற்கு கொளத்தூர் மணி, திருமாவளவன், கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் கழகம் இவர்கள் எல்லாம் செய்யாத வேலையையா சீமான் செய்துவிட்டார்? இன்று அத்தனை பேரும் ஒதுங்கி நிற்கிறார்கள்.

நாங்கள் எப்படியாவது ஒரு கவன ஈர்ப்பை கொண்டுவர முடியாதா? என்று முயற்சித்தோம். நாங்கள் ஒருமுறை டெல்லியில் சென்று சிபிஐ டி ராஜாவை சந்தித்து, அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்தோம். அவர் சொன்னது இன்னமும் நியாபகம் இருக்கிறது. ஈழப் பிரச்சினையில் புதுடெல்லி செயல்பட வேண்டும் என்றால், தமிழகம் செயல்பட வேண்டும். அன்றுதான் புரிந்தது திமுகவும், அதிமுகவும். அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள். அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துதான் வலியுறுத்த வேண்டும். போர்க்களம், அரசியல் என்பது கற்பாறைத்தன்மை கொண்டது அல்ல. இன்று பகையாக இருக்கிறவர்கள், நாளை நண்பர்களாக மாறுவார்கள். நீங்கள் உங்கள் இனத்தை நேசிக்கிறீர்கள் என்றால், அளவு கடந்த எல்லையற்ற பொறுமை உங்கள் தலைமைத்துவத்திற்கு வேண்டும். எம்எல்ஏ ஆக வேண்டும், எம்.பி. ஆக வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செப்படி வித்தைகள் எல்லாம்  செய்யலாம்.

சீமான், தான் பிரபாகரனை சந்தித்தபோது அவர் இப்படி செயல்பட வேண்டும் என தன்னிடம் சொன்னதாகவும், அதன்படியே தான் செயல்பட்டு வருவதாகவும் சொல்கிறார். அது முற்றிலும் உண்மைக்கு மாறானது. விடுதலைப் போராட்டத்தை எடுத்து நடத்துங்கள் என்று பிரபாகரனோ, அல்லது அவர்களினுடைய அதிகார அமைப்போ எல்லாம் முடிந்து போகிறது என்ற நிலை அவர்களுக்கு தெரிகிறபோது, அவர்கள் போராட்டத்தை எடுத்து நடத்துங்கள் என்று ஒன்று, இருவரிடம் அல்ல. ஆயிரம் பேரிடம் அவர்கள் சொல்லியிருப்பார்கள். அதனால் தலைவர் என்னிடம் சொன்னார், அதனால்தான் செய்கிறேன் என்று சொல்வது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது.

சீமானுக்கு, பிரபாகரனே பயிற்சி அளித்தார் என்று சொல்வதும் உண்மை அல்ல. அவர் யாருக்கும் போர் பயிற்சிகளை அளிப்பது கிடையாது. யாருக்காவது பயிற்சி அளிக்க வேண்டும் என்றால் அதற்கான நம்பர் ஒன் பயிற்சி தளம் என்பது கடாபியின் பயிற்சி கூடமாகும். பயிற்சிகளுக்கு என்று முகாம்கள் உள்ளன. அதற்கு என்று பயிற்சி அணிகள் உள்ளன. சீமானின் கருத்துக்கள் விடுதலை போராட்டத்தை எந்த அளவிற்கு இழிவு செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு இழிவுபடுத்தும் செயலாகும். இந்த மாதிரி விடுதலைப் போராட்டத்தையும், புலிகள் இயக்கத்தையும் இழிவுபடுத்துகிற செயல்களை எல்லாம் செய்யக்கூடாது. அதுவும் சீமான், புலிகள் முகாமிற்கு எல்லாம் சென்றதாக தெரியவில்லை. இவர் சினிமா படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஷுட்டிங்கிற்கு பயன்படுத்தும் துப்பாக்கிகளை எடுத்து, புகைப்படம் எடுத்ததாக சொல்கிறார்கள். அது ஒரு விஷயம் அல்ல. நானும் புலிகள் அமைப்பை சேர்ந்த தளபதி பால்ராஜ், சூசை உள்ளிட்டோரை நேர்காணல் எடுத்துள்ளேன். அவர்கள் நேர்காணல் முடிந்ததும் வாங்க படகில் போகலாம் என அழைத்துச் சென்றார்கள். அதை நானும் புகைப்படம் எடுத்து வந்து, பொதுவெளியில் வெளியிட்டால் அதைவிட கேவலம் எதுவும் இல்லை. இதுபோன்ற மோசடியான வேலைகள் மிகவும் தவறானது.

seeman

சீமான் விவகாரம் சர்ச்சையாகிய நிலையில், புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், புலனாய்வு பிரிவில் இருந்தவர்கள் எல்லாம் அவருக்கு ஆதரவாக வருகிறார்கள். பொட்டம்மான் ஒரு வருடம் சீமானை கண்காணித்து, அதற்கு பிறகு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இன்று கட்டளை தலைமை என்ற ஒன்று இல்லை. ஆனால் உண்மையான உணர்வோடு போராளிகள் தங்களால் முடிந்த அளவில் வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதே வேளையில் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு நிறைய பேர் இதுபோன்ற கூத்துக்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக இவர்கள் தான் இயக்கம், இவர்கள்தான் உண்மையான பிரதிநிதிகள் என்று சொல்லுகிற அளவிற்கு இன்று யாரும் இல்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு.

ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சொத்துக்களை எல்லாம் அபகரித்துக் வைத்து கொண்டிருப்பவர்கள், இயக்கத்தின் முதலீடுகளை எல்லாம் கட்டுப்படுத்துபவர்கள், இந்த போராட்டத்தின் பின் கதையாடலை கட்டுப்படுத்த இதுபோன்ற கதாபாத்திரங்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோன்று பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் மீண்டும் வருவார். இது சிங்கள பேரின வாதத்திற்கும் பயன்படுகிறது, உலக சக்திகளுக்கும் பயன்படுகிறது. எப்படி என்றால் பிரபாகரன் இருக்கிறார் என்றால் புலிகள் இயக்கம் மீதான தடையை தொடரலாம் என பயன்படுத்துகிறார்கள். மக்களை பொருத்தவரை பிரபாகரன் மீண்டும் வருகிறார் என்றால் நாம் முயற்சி செய்ய வேண்டியதில்லை. அவர் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பார் என்று கருதுகிறார்கள். தன்னெழுச்சியோடு மக்கள் எழுவதையும் அது தடுத்து நிறுத்துகிறது. உலகம் புலிகள் மீது விதித்துள்ள தடையை நீக்காமல் இருப்பதற்கும் அது உதவியாக இருக்கிறது. இப்படி தலைவர் வருவார், நாங்கள்தான் இயக்கம் என்று சொல்பவர்கள் யார் என்றால், தமிழர்களை அழித்தவர்களுக்கு, அழித்துக்கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ