சட்டமன்றத்தில் நடைபெறும் தரம் தாழ்ந்த விவாதங்கள், அவையின் கட்டுப்பாடற்ற கூச்சல்கள் மற்றும் புதிய அரசியல் கட்சிகளின் போக்கு குறித்து அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான எஸ்பி லக்ஷ்மணன் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:


நேரலை நாடகமும் சமுதாயச் சீரழிவும்
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவது இளைஞர்களை அரசியல் மயப்படுத்தினாலும், மற்றொருபுறம் அவையில் பயன்படுத்தப்படும் வன்மமான வார்த்தைகளும் வெற்று வாதங்களும் சமூகத்திற்கு நச்சாக மாறுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் என்ற குறைந்தபட்ச தார்மீகப் பயம்கூட ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இல்லாமல் போனது வேதனையானது.
‘புதுசு’ என்று கூறிக்கொண்டு அதே பழைய அராஜகம்!
“நாங்கள் நிர்வாகத்திற்குப் புதியவர்கள், மாற்றத்தைத் தர வந்தவர்கள்” என்று கூறிக்கொள்ளும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட தரப்பினர், திட்டமிட்ட சீண்டல்களிலும் சில்மிஷ வேலைகளிலும் ஈடுபடுவது நியாயமில்லை. திமுக, அதிமுக செய்த தவறுகளையே தாங்களும் செய்வார்கள் என்றால், மாற்றாக வந்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
சபாநாயகரின் பரிதாப நிலை
75 வயதைக் கடந்த சபாநாயகரால் அவையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை பரிதாபமாக உள்ளது. எச்சரித்த பிறகும் உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து சண்டை போடுவது குழந்தைகளுக்கு தவறான வழிகாட்டுதலையே தரும். கட்சித் தலைவர்கள் தங்களது உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது சபைக்குச் செய்யும் துரோகம்.
பரந்தூர் விவகாரமும் பினாமி அரசியலும்
பரந்தூர் விமான நிலையத் திட்ட நிலக் கையகப்படுத்துதலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு திட்டம் வருவதற்கு முன்பே சுற்றியுள்ள நிலங்களை வாங்கிப் போடும் பினாமி அரசியலையும், அதற்குச் சபையில் தரப்படும் நக்கல் பதில்களையும் கடுமையாகச் சாடினார்.
தொங்கு சட்டமன்றம் போன்ற சூழலில் ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டியவர்கள், இதுபோன்ற சண்டைகளில் நேரத்தை வீணடிப்பது சரியல்ல என்று கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
தங்க மோதிரத் திட்டம்: திறமைமிக்க வணிகமா அல்லது சட்டத்திற்கு உட்பட்ட விஞ்ஞான ஊழலா? – ஒரு அலசல்
