spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதமிழ்நாட்டை விபூதியடிக்க முடியாது! நிதீஷுக்கு நேரடி ஆப்பு! அம்பலப்பட்ட சதி!

தமிழ்நாட்டை விபூதியடிக்க முடியாது! நிதீஷுக்கு நேரடி ஆப்பு! அம்பலப்பட்ட சதி!

-

- Advertisement -

பீகார், தமிழக தேர்தலுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும், தேர்தல் முடிந்த உடன் இதை கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

மத்திய அரசு அறிவித்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள சதிகளை உடைக்கும் விதமாக ஜீவசகாப்தன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- பாஜகவின் கொள்கை என்பது சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கக்கூடாது. இடஒதுக்கீடு இருக்கக்கூடாது. மொழி அடிப்படையில் மாநிலங்கள் இருக்கக்கூடாது. எதுவுமே அவர்களுக்கு இருக்கக்கூடாது. இந்து என்கிற விஷயத்தை சொல்கிறார்கள். ஆனால் இந்து வன்னியர்களுக்கான கட்சியோ, இந்து நாடார்களுக்கான கட்சியோ கிடையாது. அது இந்து பார்ப்பனர்களுக்கான கட்சியாகும். அப்போது இந்த தொழிலாளர்களுக்காகவோ, இந்து மதத்தில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்காகவோ அவர்கள் பாடுபடக் கிடையாது. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அவர்களின் கொள்கைக்கு எதிரானது.

முதலில் இவர்களுக்கு நேர்மையான கொள்கை என்பது கிடையாது. அதை வெளியில் சொல்லவும் மாட்டார்கள். சூத்திரன் படிக்கக்கூடாது என்கிற மனுதர்ம தத்துவம் தான் அவர்களுடைய தத்துவம். அதை வெளிப்படையாக பேச முடியுமா?  இவர்களுக்கு என்ன திடீர் என்று அக்கறை? ஒன்றுமில்லை பீகாரிலும், தமிழ்நாட்டிலும் தேர்தல் வருகிறது. இரண்டுமே சமூகநீதி அடிப்படையிலான மாநிலமாகும். பீகாரில் லாலு பிரசாத் யாதவ் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர். பீகாரில் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதை நீதிமன்றமும், பாஜகவும் ஏற்க மறுத்துவிட்டன. இன்றைக்கு நாங்களே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்போம் என்கிறார்கள்.

சரி எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவார்கள். 2011, 2021 அடுத்து 2031. அதற்குள் பீகார் தேர்தலும், தமிழ்நாடு தேர்தலும் முடிந்துவிடும் அல்லவா? அதற்கு பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி இவர்கள் பேசுகிறார்களா என்று பாருங்கள். 2011ஆம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பும் எடுத்து, லிஸ்ட் மோடியின் டேபிளுக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் கொடுக்கப்பட்டு விட்டது. மன்மோகன் காலத்தில் எடுக்கப்பட்ட லிஸ்ட்டை அப்படியே வைத்திருக்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன் நீங்கள் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டாம். ஏற்கனவே எடுத்த சாதி வாரி கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடுங்கள். 2011ஆம் ஆண்டில் எடுத்தது காங்கிரஸ் வெளியிடவில்லை. நீங்கள் வெளியிடுங்களே.

காங்கிரஸ் வெளியிடாததும் ஒரு உள்நோக்கம் கொண்டதுதான். இரு கட்சிகளுமே பார்ப்பனர்களுக்கானதுதான். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ராகுல்காந்தி தான் வலியுறுத்துவார். காங்கிரஸ் வலியுறுத்தாது. ராகுல்காந்தி காங்கிரஸ் என்பது முற்போக்கானது. அதை பிராமணத்துவ கட்சியாக பார்க்க மாட்டேன். அவர் பெரியாரின் புத்தகத்தை மோடிக்கு பரிசளிப்பேன் என்று சொல்கிறார். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ஆட்சி செய்து கொள்ளுங்கள் ஆனால் தமிழ்நாட்டிற்குள் வர முடியாது என்று சொல்கிறார். அவர் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக உள்ளார். அதனால் கார்ப்பரேட்டுகள் எல்லாம் ராகுலுக்கு எதிராக உள்ளனர்.

ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் – மன்மோகன் சிங்

தற்போது பாஜகவின் பேச்சை கேட்டு ஏமாறாமல் ஏற்கனவே எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். க1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் வன்னியர்கள் போன்றவர்களுக்கான இடஒதுக்கீடுகள் போடப்பட்டது. பட்டியலினத்தவர் மற்றும் சிறுபான்மை மக்களின் மக்கள் தொகை ஒவ்வொரு முறையும் எடுப்பார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை கணக்கெடுக்க மாட்டார்கள். 1931ல் இருந்து 2025 என்கிறபோது மக்கள் தொகையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டால் பாஜக அம்பலமாகிவிடும். ஏனென்றால் பாஜக இந்துக்களுக்கான கட்சி என்கிற வாதம் அடிபட்டு, பிராமணர்கள் கட்சி என்று வெளிப்பட்டு விடும். இந்தியாவில் அதிகாரத்தில், நீதித்துறையில் முழுக்க முழுக்க பிராமணர்கள் தான் இருக்கிறார்கள். அப்போது, பிராமணர் அல்லாதோரின் பிரச்சினைகளை கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

Nirmala

இந்தியாவின் உளவுத்துறையை தீர்மானிப்பது, வெளியுறவுத்துறையை தீர்மானிப்பது எல்லாம் ஒரு சாதிதான் உள்ளது. இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிற இடத்தில் அந்த ஒரு சாதிதான் உள்ளது. இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் இவை எல்லாம்  வெளியே தெரிந்துவிடும். இந்தியாவின் முக்கிய பொறுப்புகளில் எவற்றிலும் பிராமணர் அல்லாதோர் எவரும் கிடையாது. இந்த விவரங்கள் மோடியின் டேபிளுக்கு போய்விட்டது. இவை வெளியே வந்தால் பாஜகவில் இருக்கிற இந்துக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிடும். அதனால் வெளியிட மாட்டார்கள்.

தேர்ந்தெடுக்கிற பொறுப்புகளுக்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் ஆளுநர், சட்ட மேலவை உறுப்பினர், ராஜ்யசபா உறுப்பினர் போன்ற நியமன பதவிகளில் எல்லாம் வந்துவிடுவார்கள். கஷ்டப்பட்டு மக்களை சந்தித்து வாக்கு கேட்பது தமிழிசை தான். ஆனால் நிர்மலா சீதாராமன், அப்படியோ போய்விடுவார்கள். அப்போது அனைத்து இடங்களிலும் தீர்மானிக்கும் இடங்களில் அவர்கள் உள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் எல்லாம் தெரிந்துவிடும். அதனால் தான் எடுக்காமல் இருந்தனர். இப்போதும் சொல்கிறேன் அவர்கள் எடுக்க மாட்டார்கள்.

anbumani

சாதிவாரி கணக்கெடுப்பு மோடி எடுக்கப்போகிறார் என்பதை தெரிந்த உடன் பாமக, பாஜக உடன் போய் கூட்டணி சேர்வதற்கு காரணம் கிடைத்துவிட்டது. பாமக ஒரு சமூகநீதி கட்சி என்றுதானே சொல்கிறார்கள். இடஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக உடன் எப்படி கூட்டணி வைப்பீர்கள் என்று கேட்டால், திராவிட கட்சிகள் தான் எங்களுக்கு செய்யவில்லை. மோடி பாருங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறார். இது எங்கள் ஐயாவுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லிவிட்டு சேர்ந்துவிடலாம். அதிமுக- பாஜக – பாமக என்பது ஒரு மிகப்பெரிய கூட்டணியாகும்.
பீகாரில் தேர்தல் வருகிறது. நிதிஷ்குமார் – பாஜக கூட்டணிக்கு முழுவதும் கெட்டப் பெயர் இருக்கு. நிதிஷ் குமார் கட்சி தொண்டர்களை பார்க்க வேண்டும். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நமது கட்சியின் அடிப்படை கொள்கை ஏற்றுக் கொண்டார்கள். இதை தாண்டி அவர்கள் இதை கொண்டுவரவே மாட்டார்கள்.  மாநிலங்களை சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க விடமாட்டார்கள். இவர்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் வெளியிட மாட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ