Homeசெய்திகள்ஆன்மீகம்பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

-

பிரசித்தி பெற்ற  பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவின் 9ஆம் விழாவான இன்று காலை 8.30மணிக்கு மேல் 9மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது.

பிரசித்தி பெற்ற  பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்
பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

தேர் கோவிலின் நிலையடிக்கு  வந்ததும் அன்னதானம் மற்றும் காஞ்சி தர்மம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும்,  இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசையும், 8.45 மணிக்கு பக்தி பஜனையும், 9மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி முழுவதும் உலா வருதலும் நடக்கிறது.

10-ம் விழாவான நாளை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அம்மன் ஆராட்டுக்கு எழுந்தருளல் மற்றும் இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனையும் 9 மணிக்கு தெப்பத்திருவிழாவும் 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமே செய்து வருகிறது. கன்னியாகுமரியில் பிரிசித்தி பெற்ற  பகவதி அம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், கன்னியாகுமரியில் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களின் தேவைக்கேற்ப அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு சார்பில் சிறப்பு பேரூந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற  பகவதி அம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்
வைகாசி விசாக பெருந்திருவிழா தேரோட்டம்

தேரோட்டத்தையொட்டி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகானந்தா கேந்திரா தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க வசதியாகவும்  சுற்றுலாப் பயணிகளும் இதில் கலந்துகொண்டு பிரிசித்தி பெற்ற  பகவதி அம்மனை தரிசனம் செய்ய வசதியாகவும் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து 2 மணிநேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

MUST READ