ஆவடி காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேரில் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர், மாணவர்கள் சாலை விழிப்புணர்வு பேரணிகொடி அசைத்து துவக்கி வைத்தார்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில், ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து இணை ஆணையாளர் விஜயலட்சுமி அவர்கள் வழிகாட்டுதல் படி ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் சாலை விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் ஆவடி சுற்று பகுதியில் அமைந்துள்ள 24 பள்ளியை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்திய படி காமராஜ் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபயணமாக பல்வேறு வாசகங்களை சொல்லிக் கொண்டு பேரணியாக சென்றனர்.
காமராஜ் நகர் வளைவு பகுதியில் சரியான முறையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கும், நான்கு சக்கர வாகனத்தில் சரியான முறையில் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும் ஆய்வாளர் ஜெயக்குமார் பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் போக்குவரத்து காவலர்கள், காவல்துறையினர்கள் உடன் இருந்தனர்.