Homeசெய்திகள்சென்னைசென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது

சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது

-

- Advertisement -
kadalkanni

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, புதிய உச்சமாக ரூ.58,720-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.58,400-க்கும், கிராம் ரூ.7,300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தினை எட்டியுள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.58,720-க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத்தங்ஙகம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.7,340-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, கிராம் ரூ.112-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.

MUST READ