டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் ரெட்ரோ படம் குறித்து ரிவ்யூ கொடுத்துள்ளார்.
இன்று (மே 1) உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சூர்யாவின் ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, நானியின் ஹிட் 3, அஜய் தேவகனின் ரெய்டு 2 ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. அதில் தமிழ்நாட்டில் ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்து வருகிறது. அதிலும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தையும், இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்ததற்காக இதன் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர். இதில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் காட்சியை பார்க்க ப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அபிஷன் ஜீவிந்த், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஒரு நாளுக்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கவில்லை. நகைச்சுவை காட்சிகள், கிளைமாக்ஸ் போன்றவை நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. படத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேருங்கள். அனைவருக்கும் நன்றி” என்று அழுது கொண்டே எமோஷனலாக பேசினார்.
இது தவிர, “ஒரு அருமையான படத்தை கார்த்திக் சுப்பராஜ் கொடுத்திருக்கிறார். சூர்யாவின் மேஜிக் ஒவ்வொரு காட்சிகளிலும் திரையை வசியப்படுத்தி இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார் அபிஷன் ஜீவிந்த்.