Homeசெய்திகள்சினிமாலண்டனின் ட்ரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவ தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.ஆர். ரகுமான்!

லண்டனின் ட்ரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவ தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.ஆர். ரகுமான்!

-

- Advertisement -

லண்டனில் இருக்கும் ட்ரினிட்டி லாபான் இசைப் பள்ளியின் கௌரவ தலைவராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.லண்டனின் ட்ரினிட்டி லாபான் இசைப் பள்ளியின் கௌரவ தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.ஆர். ரகுமான்!

இந்திய திரை உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்து தற்போது இந்திய அளவில் கோடான கோடி ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அந்த வகையில் ரசிகர்கள் பலரும் இவரை இசைப்புயல் என்று கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதற்கேற்ப இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி என பல மொழிப் படங்களில் பணியாற்றி கிட்டத்தட்ட ஏழு தேசிய விருதுகளை வென்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இவர் தற்போது காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் லண்டனில் உள்ள கன்சர்வேட்டரியான ட்ரினிட்டி லாபான் இசைப் பள்ளியின் கௌரவ தலைவராக ஏ ஆர் ரகுமான் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் இப்பதவியில் ஐந்து ஆண்டு காலம் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.லண்டனின் ட்ரினிட்டி லாபான் இசைப் பள்ளியின் கௌரவ தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.ஆர். ரகுமான்! இதுகுறித்து ட்ரினிட்டி லாபான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏ ஆர் ரகுமான் உடனான எங்கள் ஒத்துழைப்பு கடந்த 2008இல் கே எம் மியூசிக் கன்சர்வேட்டரியை நிறுவிய போதிலிருந்து ஆரம்பமாகிறது. இந்த ஆண்டு ட்ரினிட்டி லாபான் முறைப்படி ஒன்று சேர்ந்துள்ளது. கே எம் எம் சி மாணவர்கள் தங்களின் படிப்பை சென்னைக்கும் லண்டனுக்கும் இடையில் இணைக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது. எல்லை தாண்டி கருத்துக்கள் மற்றும் மரபுகளின் பரிமாற்றத்தை வளர்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ