கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்… நடிகர் ஜீவா விருப்பம்…
- Advertisement -

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஜீவா. தொடக்கத்தில் காதல் திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த ஜீவா அடுத்து ஆக்ஷன் ஹீராவாக அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்திருந்தார். அண்மைக் காலங்களில் கவலை வேண்டாம், என்றென்றும் புன்னகை, சங்குலி புங்குலி கதவ திற, கலகலப்பு 2 என முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து கமர்ஷியல் படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். நடிகர் ஜீவா திரையுலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

இதை கொண்டாடும் விதமாக அண்மையில், இசை தயாரிப்பில் களம் இறங்கினார் நடிகை ஜீவா. அண்மையில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான யாத்ரா இரண்டாம் பாகத்தில் ஜீவா நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் மம்மூட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை நடிகர் ஜீவா கண்டு ரசித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞரை பற்றி சினிமாவில் நிறைய கேள்விப்பட்டிருப்பதாகவும், அவரது புகைப்படங்களை பார்த்து வியந்துபோனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கலைஞரின் வரலாறு படமாக்கப்பட்டால், அதில் நடிக்க ஆசை என்றும் அது தனக்கு பெருமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.