நடிகர் சந்தானம் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கினார். அந்த வகையில் விஜய், அஜித், தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய சந்தானம் தனக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இவர் ஹீரோவாகவும் உருவெடுத்து தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் இங்க நான் தான் கிங்கு எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் டிடி ரிட்டன்ஸ் 2 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் நடிகர் சந்தானம் இன்னும் சில படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அதேசமயம் நடிகர் சந்தானம் இயக்குனராகவும் மாற இருக்கிறாராம். தற்போது சந்தானம் கமிட்டாகி இருக்கும் படங்களை முடித்த பின்னர் புதிய படம் ஒன்றை தானே இயக்கி நடிக்கப் போகிறாராம். அதற்காக சில எழுத்தாளர்களுடன் இணைந்து ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களை சந்தானம் இயக்கும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.