spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎஸ்.டி.ஆர்.48 ஆரம்பம்... பாங்காங் புறப்பட்டார் சிம்பு...

எஸ்.டி.ஆர்.48 ஆரம்பம்… பாங்காங் புறப்பட்டார் சிம்பு…

-

- Advertisement -
கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 48-வது படம் கைவிடப்பட்டதாக பல தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் சிம்பு படப்பிடிப்புக்காக பாங்காங் புறப்பட்டுள்ளார்.

உடல் பருமன், படப்பிடிப்புக்கு தாமதம், சர்ச்சை பேச்சு என பல விமர்சனங்களுக்கு ஆளான நடிகர் சிம்பு, கொரோனா காலத்திற்கு பிறகு சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். அவரது நடிப்பில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியானது. தொடர்ந்து, வெங்கட் பிரபுவுடன் மாநாடு, கௌதம் மேனனுடன் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது சிறந்த கதைகளை தேர்வு செய்து, படத்திற்காக தன்னையும் தயார் செய்து நடித்து வருகிறார்.

we-r-hiring
தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இத்திரைப்படம் சிம்பு நடிக்கும் 48-வது படமாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையிலும், படப்பிடிப்பு தொடர்பான எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.

இதனால், இப்படம் அதிகார்பூர்வமாக கைவிடப்பட்டது என்றும், படத்திலிருந்து சிம்பு விலகியதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வௌியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த 3-ம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கா நடிகர் சிம்பு, சென்னையிலிருந்து பாங்காங் புறப்பட்டு சென்றிருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ