சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு பேசியுள்ளார்.
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கும் நிலையில் நடிகர் ஆர்யா இப்படத்தை தயாரித்துள்ளார். சந்தானத்துடன் இணைந்து செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி, நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், யாஷிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆஃப்ரோ இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஹாரர் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற மே 16ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அந்த ட்ரெய்லரில் செல்வராகவன் பேயாக காட்டப்பட்டிருந்தார். அதேசமயம் காக்க காக்க படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே பாடலுக்கு கௌதம் மேனன், யாஷிகா இருவரும் கடற்கரையில் ஓடி விளையாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இது இணையத்தில் செம வைரலாகி வந்தது.
#SilamabarasanTR at #DDNextLevel Event ⭐:
“Enga Director Gowtham Menon’ah ipdi panvinganu edhir paakave ila..😅 Adhu oru vishayam mattum summa vida maaten ungala..”💥pic.twitter.com/vXCPnBOH9i
— Laxmi Kanth (@iammoviebuff007) May 5, 2025
இந்நிலையில் இது குறித்து டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிம்பு பேசியுள்ளார். அதன்படி அவர், “எங்க டைரக்டர் கௌதம் மேனனை இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. அந்த ஒரு விஷயத்தில மட்டும் உங்கள சும்மா விடமாட்டேன்” என்று கலகலப்பாக பேசியுள்ளார்.