Homeசெய்திகள்சினிமாஇவ இல்லன்னா இன்னொருத்தி.... திருமணம் குறித்து சிம்புவின் கருத்து!

இவ இல்லன்னா இன்னொருத்தி…. திருமணம் குறித்து சிம்புவின் கருத்து!

-

- Advertisement -

நடிகர் சிம்பு திருமணம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.இவ இல்லன்னா இன்னொருத்தி.... திருமணம் குறித்து சிம்புவின் கருத்து!சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர் சிம்பு. இதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது STR 49, STR 50, STR 51 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. எனவே இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் 42 வயதாகும் சிம்பு தற்போது வரை முரட்டு சிங்கிளாக இருக்கிறார். அவர் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தக் லைஃப் படம் தொடர்பாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார் சிம்பு.

அதன்படி அவர், “திருமணம் என்பது பிரச்சனை இல்லை. மக்கள்தான் பிரச்சனை. ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை இன்றுள்ள காலகட்டத்தில் மிகவும் குறைவாக இருக்கிறது. இது என்னுடைய வாழ்க்கை. எனக்கு இதுதான் முக்கியம், அதுதான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். நீ இல்லனா இன்னொருத்தன். நீ இல்லனா இன்னொருத்தி என்று நினைக்கிறார்கள். இவ இல்லனா இன்னொருத்தி வந்துகிட்டே தான் இருப்பா. அதற்காக இருக்கிறவள விட்டுட்டு போகக்கூடாது. கல்யாணம் என்பது தவறில்லை. சரியான நேரம் வரும்போது சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு திருமண வாழ்க்கை நன்றாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

 

MUST READ