பிரபல நடிகர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தன் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அரசியலிலும் ஈடுபட்டு மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன்வாழ்ந்து வந்தார் விஜயகாந்த். இவர் கடந்த நவம்பர் மாதத்தில் தொண்டை வலி போன்ற பிரச்சனையால் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 12ல் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய முன் தினம் மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவி வந்த நிலையில் சாதாரண பரிசோதனைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக கட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதேசமயம் இன்று காலை விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தேமுதிக நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் தலையில் இடி விழுந்தது போல் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. உடல் நலக்குறைவால் விஜயகாந்த் மருத்துவமனையிலேயே காலமானார் என்ற தகவலை கேட்டு ரசிகர்களும் தொண்டர்களும் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் ஆம்புலன்சை மறித்து ரசிகர்கள் கதறி அழுகின்றனர்.
மியாட் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பிலும் விஜயகாந்த் உயிரிழந்தது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.