நடிகை மஞ்சு வாரியர், பிரித்விராஜ் குறித்து பேசியுள்ளார்.நடிகை மஞ்சு வாரியர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் தமிழில் கடைசியாக இவர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரின் கூட்டணியில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் ஆர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில் இவர் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் எம்புரான் திரைப்படத்தில் பிரியதர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் வருகின்ற மார்ச் 27அன்று திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர், பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்தது தொடர்பாக பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “என்னுடைய திரைப் பயணத்தில் லூசிபர் திரைப்படமும், பிரியதர்ஷினி ராமதாஸ் என்ற கதாபாத்திரமும் மறக்க முடியாதவை.
பிரித்விராஜை பொறுத்தவரை ஒரு இயக்குனராக தனக்கு என்ன தேவை என்பதை தெரிந்து வைத்திருப்பதைப் போல தனக்கு என்ன தேவை இல்லை என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். அதனால் அவரால் படப்பிடிப்பில் நடிகர்களை மிகவும் சுலபமாக கையாள முடிகிறது. அவர் ஒரு நல்ல இயக்குனர். என்னுடைய பேவரைட் இயக்குனர்களில் பிரித்விராஜும் ஒருவர். நிச்சயமாக அந்தப் பட்டியலில் அவருக்கு முக்கியமான இடம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -