spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசுய கதையில் சஞ்சனா... போர் குறித்து சுவாரஸ்ய பேச்சு...

சுய கதையில் சஞ்சனா… போர் குறித்து சுவாரஸ்ய பேச்சு…

-

- Advertisement -
இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் நடிகை சஞ்சனா நடராஜன். இதைத் தொடர்ந்து, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது தவிர நோட்டா, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களிலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இறுதியாக சஞ்சனா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்படம் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்போது சஞ்சனா நடிப்பில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் போர். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டேவிட் பட இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கி இருக்கிறார். டி சீரிஸ் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது. தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராமை வைத்தும் இந்தியில் ஹர்ஸ்வர்தன் ரனே, ஈஹான் பட்டை வைத்தும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு இந்தியில் டங்கே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. வரும் மார்ச் 1-ம் தேதி படம் வெளியாகிறது. இந்நிலையில், படம் குறித்து பேசிய நடிகை சஞ்சனா, இதில் மருத்துவ மாணவியாக நடித்துள்ளேன் என்றும், படத்தில் சுய கதையில் என் நிஜ குணத்தை போலவே கதாபாத்திரமும் அமைந்துள்ளது எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

MUST READ