spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் தமன்னாவை இயக்கும் சுந்தர் சி... அடுத்து திகில் ஹிட் கொடுக்க தயார்...

மீண்டும் தமன்னாவை இயக்கும் சுந்தர் சி… அடுத்து திகில் ஹிட் கொடுக்க தயார்…

-

- Advertisement -
அண்மையில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4-ம் பாகம் திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டில் முதல் பிளாக் பஸ்டர் திரைப்படமாக இது அமைந்தது. சுமார் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து இன்றும் வசூலை குவித்து வருகிறது. விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ்பிரதாப் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அரண்மனை படத்தின் வெற்றிக்கு பிறகு கலகலப்பு மூன்றாம் பாகத்தை சுந்தர் சி இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாக வில்லை. இருப்பினும், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அப்டேட் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அரண்மனை படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்த சுந்தர் சி அடுத்து சிறிய பட்ஜெட் படத்தை இயக்காமல், மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அதன்படி, அடுத்து மீண்டும் திகில் படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும், அதில் தமன்னாவை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்த்திருக்கின்றனர்

MUST READ