விஷால் – சுந்தர்.சி படத்தில் மற்றுமொரு நடிகை இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
புரட்சித்தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஷால் தற்போது தனது 35 வது படமான ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்னதாக இவரது நடிப்பில் ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியானது. இதில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சுந்தர். சி இயக்கத்தில் வெளியான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து விஷால் – சுந்தர். சி கூட்டணி மீண்டும் இணையப் போவதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒருவர் கயடு லோஹர் எனவும் தகவல் கசிந்திருந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இருப்பினும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே விஷால் – சுந்தர்.சி – தமன்னா ஆகியோரின் கூட்டணி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஆக்சன்’ படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.