தான் தந்தை மீது பல குற்றசாட்டுகள் எழுந்து வருவதை அடுத்து ஏஆர் ரகுமானின் மகள் கதிஜா ரகுமான் ஒரு பதிவு மூலம் பதில் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி பற்றி நாம் மீண்டும் கூற வேண்டிய அவசியமில்லை. பலரும் ரகுமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவரின் ஆதரவாளர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
“கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவில் இருந்து அனைத்து மீடியாக்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் இணைந்து ஏஆர் ரகுமான் ஏதோ இழிவான அரசியல் செய்து விட்டதாகவும் மக்களை ஏமாற்றி விட்டதாகவும் பல செய்திகள் எழுந்து வருகின்றன.
அந்த நிகழ்ச்சி அப்படி ஆனதற்கு முழு காரணம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அமைப்பாளர்கள் மட்டுமே. ஆனாலும் ஏஆர் ரகுமான் அதற்காக முழு பொறுப்பையும் தன் மீது ஏற்றுக்கொண்டார்.
2016-ல் சென்னை, கோயமுத்தூர் மற்றும் மதுரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நெஞ்சே எழு இசை கச்சேரி நடத்தினார்.
அதையடுத்து கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக வெளிநாடுகளில் 2018 ஆம் ஆண்டு இசை கச்சேரி நடத்தினார்.
பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2020 ஆம் ஆண்டு உதவி செய்தார்.
🙏🙏🙏 pic.twitter.com/b4QPvMCXWf
— Khatija Rahman (@RahmanKhatija) September 11, 2023
அதையடுத்து சினிமா லைட் மேன்கள் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக 2022 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். எனவே பேசுவதற்கு முன் யோசித்து பேசுங்கள்” என்று ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது.
அதை பகிர்ந்துள்ள கதீஜா ரகுமான் அதை உருவாக்கியவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.