Homeசெய்திகள்சினிமாஏப்ரலில் வெளியாகும் 'அரண்மனை 4'..... புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்த  படக்குழு!

ஏப்ரலில் வெளியாகும் ‘அரண்மனை 4’….. புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்த  படக்குழு!

-

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி, பல்வேறு வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சுந்தர் சி நடிப்பில் அடுத்ததாக ஒன் 2 ஒன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் சுந்தர் சி , அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏப்ரலில் வெளியாகும் 'அரண்மனை 4'..... புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்த  படக்குழு!இந்த படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் அக்னி சினிமா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் சி மற்றும் குஷ்பூ ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோரும் இவர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படம் ஏற்கனவே 2024 பொங்கல் குணத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் தினத்தன்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியான காரணத்தால் அரண்மனை 4 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி தற்போது அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏப்ரலில் வெளியாகும் 'அரண்மனை 4'..... புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்த  படக்குழு!சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தில் முதல் மூன்று பாகங்களைப் போல் நான்காவது பாகமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் காமெடி கலந்த ஹாரர் கதைகளத்தில் தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ