கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது.
இந்தப் படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியிருந்தார்.
இப்படத்தில் அருள் நிதியுடன் இணைந்து ரமேஷ் திலக், அபிஷேக் ஜோசப், சனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதனை மோகனா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் மு க தமிழரசு தயாரித்திருந்தார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு 7 ஆண்டுகள் கழித்து டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படமும் அஜய் ஞானமுத்து மற்றும் அருள்நிதியின் கூட்டணியில் உருவாகிறது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், VJ அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட்நைட் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோக்களையும் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.