கேப்டன் மில்லர் திரைப்படம் எனது ஆசைகளை நிறைவேற்றியது – நிவேதிதா சதீஷ்
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் நிவேதிதா சதீஷ். மகளிர் மட்டும், வணக்கம், சில்லு கருப்பட்டி, இந்த நிலை மாறும், உடன்பிறப்பே ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நிவேதிதா. சில்லுக் கருப்பட்டி திரைப்படமும், மகளிர் மட்டும் திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசிய அவர், இது எனக்கு மிகப்பெரிய கனவாக தோன்றுகிறது. வளர்ந்து வரும் நடிகையான தனக்கு இது மிகப்பெரிய மேடையாக உள்ளது. நான் நடிக்க சினிமாவுக்குள் வன்தபோது, எனக்கு மூன்று பெரிய கனவுகள் இருந்தன. அதனை நான் எனது எல்லா நேர்காணல் நிகழ்ச்சியிலும் தெரிவித்திருப்பேன். முதல் கனவு பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பது, இரண்டாவது கனவு ஒரு பீரியட் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை. மூன்றாவது கனவு தனுஷூடன் நடிக்க வேண்டும் என்பது. இந்த மூன்று கனவுகளையும் கேப்டன் மில்லர் திரைப்படம் நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. இது மிகவும மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.