Homeசெய்திகள்சினிமாவன்முறையை கிளப்பும் வீர தீர சூரன் 2... சென்னை போலீஸில் புகார்...

வன்முறையை கிளப்பும் வீர தீர சூரன் 2… சென்னை போலீஸில் புகார்…

-

- Advertisement -
வீர தீர சூரன் 2 திரைப்படத்தின் போஸ்டர் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வௌியாக உள்ளது. பா ரஞ்சித் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இதைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வீர தீர சூரன் 2. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கி பிரபலம் அடைந்த அருண்குமார் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ், சித்திக் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் தலைப்புடன் சேர்ந்து டைட்டில் டீசரும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும், முதலில் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு பின்னர் முதல் பாகத்தை வௌியிடுகின்றனர். ஜெமினி, சாமி படங்களுக்குப் பின்னர் விக்ரமின் தர லோக்கலான கமர்ஷியல் கதைக்களத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்நிலையில், வீர தீர சூரன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

வீர தீர சூரன் படத்தின் போஸ்டர் இளைஞர்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக புகார் அளித்த ஆர்டிஐ செல்வம் அளித்த பேட்டியில், இளையதளத்தில் இளைஞர்கள் பட்டா கத்தியை கொண்டு கேக் வெட்டினால், அதற்கு காவல்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகள் எடுக்கப்பட்டால் அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

MUST READ